
மாஸ்கோ:சிரியா மீது கடல் வழியாக இரு ஏவுகணகைள் தாக்கப்பட்டதாகவும், அதனை ரஷ்யா தடுத்து வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவில் அதிபர் பஷர் அல்அசாத் ஆட்சியை அகற்ற மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் சிரியாவிற்கு ஆதரவாக ரஷ்யா உள்ளது. சிரியா மீது அமெரிக்க ராணுவ நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மத்தியதரை கடல் பகுதியின் கிழக்கே சிரியா மீது இரு ஏவுகணைகள் தாக்கப்பட்டதாகவும், இதனை ரஷ்யா தடுத்து வீழ்த்தியதாகவும் , ரஷ்யா ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment