ஒரு லட்சம் பேருடன் செக்ஸ் வைத்துக்
கொள்ளும் பயணத்தை மேற்கொண்டுள்ள போலந்து நாட்டுப் பெண்ணுக்கு,
எகிப்திலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.
இந்த அசிங்கத்தை அப்பெண் தொடர்ந்து நடத்தினால் அவரைக் கொலை செய்வோம் என்று
எகிப்தைச் சேர்ந்த சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பெண் தனது
அசிங்கமான செயலுக்காக எகிப்துக்குள் நுழையக் கூடாது. மீறி நுழைந்தால்
நடப்பதே வேறு என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
போலந்து நாட்டின் வார்சா நகரைச் சேர்ந்தவர் அனியா லிசவ்ஸ்கா. 21 வயதான இவர் கிராபிக் டிசைனர் ஆவார்.
இவர் ஒரு லட்சம் ஆண்களுடன் உறவு வைத்துக்
கொள்ளும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். விதம் விதமான ஆண்களுடன் உறவு கொள்ளப்
போகிறேன். எனக்கு செக்ஸ் பிடிக்கும், அதிலும் நிறைய ஆண்களுடன் செக்ஸ்
வைத்துக் கொள்ளப் பிடிக்கும். ஒரு லட்சம் ஆண்களுடன் உலகம் முழுவதும் பயணம்
மேற்கொண்டு உறவு கொள்ளப் போகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை அவர் 400 பேருக்கு மேல் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் அனியா தனது பயணத்தின் ஒரு
கட்டமாக எகிப்துக்குச் செல்லவுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதற்கு எகிப்தில்
எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எகிப்திலிருந்து தனக்கு நிறைய அழைப்புகள் வந்திருப்பதாகவும், அதை தான் ஏற்கப் போவதாகவும் கூறியுள்ளார் அனியா.
எகிப்தைச் சேர்ந்தவரும் அங்குள்ள
சுகாதாரத்துறையில் பணியாற்றி வருபவருமான முகம்மது அப்தல் மொனீம் என்பவர்
அனியாவை எகிப்துக்கு அழைத்து வரும் பணியில் இறங்கியுள்ளாராம்.
அனியாவுக்குத் தேவையானதை செய்து கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.

அதேபோல அனியாவும் எகிப்துக்கு வருவதில்
ஆர்வமாக இருக்கிறாராம். அழகான ஆண்கள் நிறைந்த நாடு எகிப்து என்று அவர்
பெருமை பொங்கக் கூறியுள்ளாராம்.
ஆனால் இதை நிராகரித்துள்ளார் அனியா. இதுகுறித்து அவர் கூறுகையில், எகப்தில் உள்ள அராபியர்கள் என்னை விரும்புகிறார்கள். நானும் ஆர்வமாக இருக்கிறேன். சிலர் மிரட்டியுள்ளனர். ஆனால் நான் அதை பொருட்படுத்தப் போவதில்லை. எதையும் நான் சமாளிப்பேன் என்றார். வாரா வாரம் வார இறுதி நாட்களில் மட்டுமே தற்போது உறவுகளை வைத்து வருகிறார் அனியா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment