
இவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவ்விருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார்.
கந்தப்பளை பிரதேசத்தை சேர்ந்த தோட்ட பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் கர்ப்பிணியாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவி கடந்த சில மாதங்களாக பாடசாலைக்கு வருகை தராமல் இருந்துள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது இதனையடுத்தே குறித்த ஆசிரியர் கந்தப்பளை பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அறிந்து கொண்ட பாடசாலையின் பழைய மாணவர்கள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்று உடனடியாக குறித்த ஆசிரியரை பாடசாலையைவிட்டு வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment