Monday, September 30, 2013

1915 சிங்களவர் முஸ்லிம்கள் கலவரம்


சிங்கள முஸ்லிம் கலவரம் என்பது 1915 இல் இலங்கையில் சிங்களவர்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையேயான கலவரம் ஆகும். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது. கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினரான முஸ்லிம்கள்.[1] இக் கலவரம் 1915, மே 29 ஆம் நாள் ஆரம்பமாகி 1915 சூன் 5 இல் முடிவுக்கு வந்தது. மே 29, 1915 இல் கண்டியில் பெரும்பான்மை சிங்கள பெளத்த கும்பல் ஒன்று பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கியதுடன், பல முசுலீம்களின் வணிக நிறுவனங்களையும் சூறையாடினர்.[2]
இக்கலவரத்தை அடக்கும் பொருட்டு அன்றைய குடியேற்றவாத பிரித்தானிய ஆட்சியாளர்கள் படைத்துறைச் சட்டத்தை அமுல்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பல நூறு சிங்களவர்கள் கொல்லப்படனர்.
இக் கலவரத்தில் அன்றைய இலங்கைத் தமிழ் தலைவாரக இருந்த பொன் இராமநாதன், சிங்களவர்களுக்கு சார்பான செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்றும், அதானால் தமிழ் பேசும் முசுலீம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட ஒரு காரணமாக அமைந்தது.[3]
இக்கலவரம் பெரும்பான்மை சிங்கள இன மக்களுக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம் இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டது. இதுதொடர்பில் ஆங்கிலேயே அரசு தீவிரமாகச் செயற்பட்டு டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, எச் அமரசூரிய, ஏ. எச். மொலமூறே பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்தது. பொன்னம்பலம் இராமநாதன் இங்கிலாந்து சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி அச்சிங்களத் தலைவர்களை விடுவித்தார். இராமநாதன் நாடு திரும்பியபோது சிங்களத் தலைவர்கள் துறைமுகத்தில் அவரை வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர்.

VIDEO LINK

VACANCIES IN SAUDI


ஆசியாவில் 10ல் ஒரு ஆண் அறிமுகமில்லாத பெண்ணை கற்பழிப்பு: அதிர்ச்சி தகவல்


லண்டன்: ஆசியா-பசிபிக் பகுதியில் 10ல் ஒரு ஆண் தங்களுக்கு பழக்கமில்லாத பெண்ணை கற்பழித்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆசியா-பசிபிக் பகுதியில் உள்ள 10,000 ஆண்களிடம் கற்பழிப்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் பணிபுரியும் பேராசிரியர் ரேச்சல் ஜ்யூக்ஸ் இந்த ஆய்வை மேற்கொண்டார். ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுப்பது குறித்தும், ஆண்கள் பற்றியும் ஐ.நா.வின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வங்கதேசம், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.

10ல் ஒருவர் ஆசியா – பசிபிக் பகுதியில் உள்ள ஆண்களில் 10ல் ஒருவர் ஒரு பெண்ணை கற்பழித்திருப்பது தெரிய வந்துள்ளது.

பொழுதுபோக்கிற்காக ஆய்வில் கலந்து கொண்ட ஆண்களில் 75 சதவீதம் பேர் பாலியல் உரிமைக்காவும், 50 சதவீதம் பேர் பொழுதுபோக்கிற்காகவும் பெண்களை கற்பழித்ததாக தெரிவித்தனர். மேலும் 38 சதவீதம் பேர் பெண்களை தண்டிக்க கற்பழித்ததாக தெரிவித்தனர்.

துணையை கொடுமைபடுத்துதல் ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 50 சதவீதம் ஆண்கள் தங்கள் துணையை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக ஒப்புக் கொண்டனர். மேலும் 45 சதவீதம் ஆண்கள் தாங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்ததாக தெரிவித்துள்ளனர்.

கேள்வி நீங்கள் யாரையாவது கற்பழித்துள்ளீர்களா என்று ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் நேரடியாக கேள்வி கேட்கப்படவில்லை. மாறாக, உங்கள் மனைவி, காதலி அல்லாத பெண்ணை உங்களுடன் உறவு கொள்ளுமாறு எப்பொழுதாவது வற்புறுத்தியது உண்டா? அல்லது போதைப் பொருள் உட்கொண்ட நிலையில் அல்லது குடிபோதையில் இருந்த பெண்ணிடம் அவரது விருப்பத்தை கேட்காமல் உறவு கொண்டதுண்டா என்று கேட்கப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 11 சதவீதம் பேர் அதாவது 10ல் ஒருவர் தங்கள் மனைவி அல்லது காதலி இல்லாத பெண்ணை கற்பழித்தது தெரிய வந்தது.

வருங்கால கணவர் – ஒரு கனவு



வருங்கால கணவரைப் பற்றிய கனவு எல்லா பெண்களுக்கும் இருக்கவேண்டும். வயதுக்கு வந்த சில வருடங்களில் அந்த கனவு தானாகவே வந்துவிடும்.

இருபது வயதைத் தொட்ட பின்பும் அப்படி ஒரு கனவு வரவில்லை என்றால் அதை மனநிலை, உடல் நிலை கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தந்த வயதுக்கேற்ற கனவுகள் அவ்வப்போது வரவேண்டும். அந்த கனவுகள் பெண்களை திருமணம் செய்து கொள்ள பக்குவப்படுத்தும்.

ஒரு பெண் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவள் கனவுகள் வித்தியாசப்படும். ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு பெண் பணக்கார கணவர் வேண் டும் என கனவு காணலாம். கொடுமை யான சூழ்நிலையில் வாழும் பெண் தனக்கு அன்பான, ஆதரவான கண வர் கிடைப்பதுபோல் கனவு காண லாம். இப்படி பெண்கள் காணும் கனவுகள் பலவிதம்.
அந்த கனவுகள் ஒருபோதும் எல்லை மீறியதாக இருந்துவிடக்கூடாது. ஏன் என்றால் எல்லோ ருடைய வாழ்க்கை யிலும், எல்லா கனவுகளும் நிறை வேறும் என்று சொல்வதற்கில்லை.
எவ்வளவு கனவுகள், கற்பனைகள் இருந்தாலும் திருமணம் ஆன பின்பு, உடனடியாக நிஜ உலகத்திற்கு வந்து விடவேண்டும். நிஜம் கண் முன் வரும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெண்களுக்கு கட்டா யம் வேண்டும். நிஜங்களை கனவுக ளோடு ஒப்பிட்டு பார்த்து மனம் பேத லித்து நிற்பது வாழ்க்கைக்கு உதவாது. நிஜங்களை ஏற்றுக்கொண்டு வாழும்போதுதான் பெண்கள் வெற்றிகரமானவர்களாக மாறுகிறார்கள்.

திரை உலகில் கனவு கன்னியாக வலம் வரும் நட்சத்திரத்திற்கு கூட நிஜவாழ்க்கை என்பது கனவுகளுக்கு மாறாகத்தான் அமைகிறது. கனவு வேறு வாழ்க்கை வேறு என்ற உண்மையை அவர்கள் உணர்ந்துகொள்ளும்போது வாழ்க்கை கசக்கிறது. அந்த கசப்பில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை இனிமையாக்கி கொள்வதில் தான் வாழ்க்கையின் சுவா ரசியம் அடங்கி இருக்கிறது. கனவை நினைத்து நிஜத்தை அழித்து கொள்ள நினைப்பவர் களுக்கு வாழ்க்கையே கனவாகி விடுகிறது.
இன்றைய பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளும் உரிமை தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அவர்கள் காணும் கனவுகள் ஓரளவுதான் பயன்படும். அவர்களது அறிவும், அனுபவங்களும், பக்குவப்பட்டவர்களின் அறிவுரைகளுமே முழுமையாக பயன்படும்.
இந்த உலகம் மிகப் பெரியது. அதனால் சில பெண்கள் தங்களது கனவு கதாநாயகனை தேடித்தேடி களைத்துப்போகிறார்கள். அப்படியே காலத்தையும் கடத்தி வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கனவுகளுக்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை குறைக்கவேண்டும். நிஜவாழ்க்கைக்குள் தங்களை முன்நிறுத்தி, தங்கள் நிஜ கதாநாயகனை தேடத் தொடங்கவேண்டும்.
இன்று தெருவிற்கு தெரு திருமணத்தகவல் மையங்கள் உருவாகிவிட்டன. அங்கெல்லாம் சென்று, பெண்கள் தங்கள் கனவு கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சில திரு மண தகவல் மையங்களோ, பெண்களின் எல்லைமீறிய கனவுகளை தெரிந்துகொண்டு, அதற்கு தக்கபடி பொய் முகம் கொண்ட இளைஞர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். மிகைப்படுத்தப்பட்ட பொய்களைக்கூறி அவர்களுடைய கனவு கதாநாயகன்போல் `மேக்கப்’ போட்டு அந்த பெண்கள் முன்பு நிறுத்துகிறார்கள்.
அந்த பெண்களும் `ஆஹா.. இவர்தான் நம் கனவு நாயகன்’ என்று முடிவு செய்து, அவசர கதியில் திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள்.
சிறிது காலத்தில் உண்மையை உணரும்போது பெருத்த ஏமாற்றம் அடைகிறார்கள். அந்த ஏமாற்றம் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது.
இன்றைய பல விவாகரத்துகளுக்கு இந்த கனவுகளே காரணமாக இருக்கிறது. நிறை வேறாத ஆசைகள் நெஞ்சின் அடித்தளத்தில் பாரமாக அழுத்தும்போது நிஜங்களின் உயர்வை மனம் ஏற்க மறுக்கிறது. விளைவு கருத்து வேற்றுமை ஆகிறது. இருமனம் ஒரு மனமானால் கருத்துகள் ஒன்றுபடும். ஆனால் அதற்கு இந்த கனவுகள் ஒத்துழைப் பதில்லை!
கனவுகள் தேவைதான். ஆனால் அந்த கனவுகளுக்கு, நிஜங்களை ஏற்றுக்கொள்ள மறுக் கும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. கனவுகளுக்கு கற்பனைகள் மட்டும் போதுமானது. ஆனால் நிஜங்களுக்கு அனுபவ அறிவும், ஆன்ம பலமும் தேவை. நிஜங்கள் நம் கண் முன்னே நிற்கும்போது கனவுகள் எங்கிருந்தோ எட்டிப்பார்த்து நம்மை கேலி செய்யும். இதனால் ஏற்படும் ஏமாற்றம் மனதில் வெறுப்பையும், சோர்வையும் உண்டாக்கும்.

சில பெண்கள் நிழலை நிஜமாக்கி தங்கள் கனவு இலக்கை அடைய முற்படுவார்கள். கல்வியறிவில்லாத கணவனை மகாகவி காளிதாசனாக்கியது அப்படிப்பட்ட ஒரு பெண் ணின் கனவுதான். இது நிஜத்தை அப்படியே இருப்பது போலவே ஏற்றுக்கொண்டு கனவை நிஜமாக்கி வாழ்க்கையை சாதனையாக்கி காட்டும் கனவு. உள்ளங்கை அளவு உண்மையை உலகளாவிய வெற்றியாக மாற்றி காட்டும் உன்னதம் இருவர் கனவிலும் இருந்தால் அவர்கள் வாழ்க்கை பிரகாசமாகிவிடும். இந்த சாதனையை புரிய துணை நின்றதும் கனவு தான். அவரவர் மனநிலையை பொறுத்து “கனவுகள்” செயல்படுகிறது. வருங்காலத்தை வளமாக்குவதும் கனவுதான். வாழ்க்கையை கேள்வி குறியாக்குவதும் கனவுதான்.
சிந்தித்து செயல்படவும், வாழ்க்கையை திட்டமிடவும் கனவுகள் கைகொடுக்கின்றன. லட்சியங்களை உருவாக்கும் கனவு நம்முடன் வருபவர்களை வளப்படுத்தி எதிர்காலத்தை ஒளிமயமாக்குகிறது. வருங்கால கணவரை பற்றிய கனவு காண்பது தவறில்லை. அது இருவரின் வருங்காலத்தையும் வளமாக்கும் விதமான கனவாக இருத்தல் வேண்டும். சுயநலமான கனவுகள் பெரும் சுமையாகவும், பகையாகவும் உருவெடுத்து விடும்.

பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்!


டேவிட் டி ஏன்ஜலோ என்ற எழுத்தாளர் டேட்டிங் பழக்கமுள்ள ஆண்களுக்கான சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளார்.

01. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.

02. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் போகவா என்று ஒரு போதும் பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

03. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக் கூடும்.

04. இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

05. என்னை நீ விரும்புகின்றாயா என்றும் பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

06. நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.

07. நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.

08. ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான திகதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம் அதனால் இழக்கப்படக்கூடும்.

09. தொலைபேசியில் உரையாடும் போது அவதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.

10. ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத் தவறான எண்ணங்களை இது விரைவாக ஏற்படுத்தி விடும்.

ஆண் – பெண் தவறான உறவுகளுக்கு காரணம்

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?

* தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.

* திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.
* திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.

* வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம்.

தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.

* தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

எத்தனைபேருக்கு தெரியும் இந்த கொடுமை ?


அன்று குமரி மண்ணின் மைந்தர்களை( இன்று இந்து என கூறி கொள்ளும் மதம்) அடிமை படுத்தியது!! உறவுகளே சிந்தியுங்கள்!!

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று.

இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான்(சாணார் ,புலையர் ,.....) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.

சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

தாலி அறுத்தான் சந்தையில் மேலாடை அணிந்து சென்ற பெண்களின்,தாலி அறு தெறிந்தும் ,மேலாடைகள் கிளிதெறிந்தும், மார்பகங்கள் வெட்டி விசப்பட்ட கொடுமைகளும் எத்தனை பேருக்கு தெரியும் ?

நானும் என் அப்பச்சி (தாத்தா)துண்டுகள் கட்டி திரிந்ததை பார்த்தவன் !! நானும் சாதி கொடுமையால் சில உயர் சாதி இல்லத்தில் சிரட்டையில் தண்ணிர் குடித்தவன் !! இந்த நிலையை மறந்து, படித்தோம், சம்பாதிக்கிறோம் என்பதால் வரலாறை மறக்கலாமா ? மீண்டும் இந்த கொடுமை தலை தூக்கிட மதவாத கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருப்போம் !!

ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்வதற்கான காரணங்கள்!



















ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவு அவ்வளவு சுலபமானது அல்ல. அது ஒரு சிக்கலான உறவே. இந்த உறவு நீடித்து செல்வதற்கு, இருவருமே மனமார்ந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிலும் காதல் ரசத்துடன் ஆரம்பிக்கும் இந்த உறவு, திருமண வாழ்வில் நாட்கள் ஓட ஓட பல தருணங்களை எதிர்கொள்ள பொறுமையும், தன்னடக்கமும் தேவை. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினாலும், வீட்டு வேலைகளுக்காக அங்கும் இங்கும் ஓடுவதாலும் டென்ஷன் ஏற்படுவதுண்டு. இதனால் தம்பதியினருக்கு இடையே பிரச்சனைகள் எழலாம். ஆனால் யாரால் இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து தடைகளை கடந்து போக முடிகிறதோ, அவர்களால் தான் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை வாழ முடியும்.
அதிலும் குழந்தைகளுக்காக பெண்கள் தங்கள் திருமண வாழ்வு வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவார்கள். தங்களின் பாதுகாப்பு தேவையை மனதில் வைத்து கொண்டே, கணவனுடன் திருமண பந்தத்தில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் நிதிக்காகவும், பெண்கள் தங்கள் கணவனை சார்ந்தே வாழ்கின்றனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் தன் கணவனை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலைகள் பெண்களுக்கு ஏற்படும். உயிரே இல்லாத ஒரு உறவோடு வாழ்வதற்கு பதிலாக, விவாகரத்து பெறுவதே சிறந்த வழி என்று எண்ணுவார்கள். அதிலும் இந்த காலத்தில் பெண்களை ஆண்கள் தன் மனம் போன போக்கில் ஆட்டி வைக்க முடியாது. பெண்களும் விவாகரத்து கோரி நீதிமன்றம் படியேறும் காலம் வந்துவிட்டது. இப்போது பெண்கள் ஆண்களை ஏன் விவாகரத்து செய்ய விரும்புகிறார்கள் என்று பார்க்கலாமா!!!
நம்பிக்கை துரோகம்
கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்தால், பெண்கள் விவாகரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். திருமணமான போதிலும் கூட, ஆண்களுக்கு சபல புத்தி இருக்கக்கூடும். பிற பெண்களின் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். இதனைப் படித்த பெண்களால் சகித்துக் கொள்ள முடியாமல் தான் பெண்கள் விவாகரத்தை விரும்புகிறார்கள்.
முரட்டுத்தனமான நடவடிக்கை
சுயமாக சம்பாதிக்கும் பெண்ணாக இருந்தாலும், அவர்கள் விவாகரத்து கோருவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக கணவன்மார்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலோ அல்லது தாங்க முடியாத குணாதிசயத்தோடு நடந்தாலோ, பெண்கள் இந்த முடிவை எடுப்பார்கள். ஏனெனல் நிதி விஷயத்தில் யாரையும் சாராமல் சுயமாக சம்பாதிப்பதால், பெண்களுக்கு இந்த தைரியம் வருகிறது.
மற்றவர் மீது ஆசை
திருமணமான பெண்ணுக்கு மற்ற ஆணுடன் ஈர்ப்பு அல்லது தொடர்பு இருந்தாலும், அது அப்பெண்ணை விவாகரத்து கேட்க தூண்டும். இன்றைய காலக்கட்டத்தில் பல பெண்களுக்கு பிற ஆண்களின் மேல் காதல் வருவதால், அவரை மணந்து கொள்ள தற்போதைய கணவனை விவாகரத்து செய்ய விரும்புவார்கள்.
மூன்றாம் நபர்
குடும்ப சுமைகள் மற்றும் பிரச்சனைகளும் கூட ஒரு பெண் விவாகரத்து கோர ஒரு காரணமாகும். சில சமயம் பெண்களுக்கு மாமியாரின் தொந்தரவு அதிகரிக்கலாம். மாமியார் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கலாம். இது பெண்களுக்கு பிடிக்காமல் போகலாம். கிழக்கு பக்கம் பல பேர் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தாலும், இப்போது அதெல்லாம் மாறி வருகிறது. பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு இல்லாததாலும், பிரச்சனைகள் மூண்டு விவாகரத்தில் போய் நிற்கிறது. மேலும் இக்காலத்து பெண்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் தன்னுடைய திருமண வாழ்வில் தலையிடுவதை விரும்புவதில்லை. ஆனால் மேற்கு பக்கம் இப்படி நடப்பதில்லை. ஆனால் சிலநேரம் கணவன் தன் தாயின் மீது அதிக பற்றுதலை காட்டும் போதும், மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தில் போய் முடியும்.
சலிப்புத்தன்மை
சலிப்புத்தன்மையும், பெண்கள் விவாகரத்து கோருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதிலும் பெண்களுக்கு தங்களுடைய திருமண வாழ்க்கை ஒரே மாதிரியாக போய் கொண்டிருந்தால், அது அலுப்புத் தட்டிவிடுவதோடு, விவாகரத்தையும் கேட்க வைக்கும்.
உடலுறவில் பிரச்சனை
கணவன் உடலுறவில் தகுதியில்லாமல் இருந்தாலும், அந்த காரணத்திற்காகவும் ஒரு பெண் விவாகரத்து கோருவாள்.
அடிப்பது
மனைவியை அடிப்பதனால் கூட ஒரு பெண் தன் கணவனை விட்டு விலக விவாகரத்தை எதிர்பார்க்கும் ஒரு காரணமாகும். மேற்கு மற்றும் கிழக்கு பக்கங்களில், குடிகார கணவன்கள் தங்கள் மனைவியை அடிக்கடி அடிப்பார்கள். மேற்கு பகுதியில் அப்படிப்பட்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் விவாகரத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் கிழக்குப் பக்கமோ பெண்களுக்கு அதிக படிப்பறிவு இல்லாததால், அவர்கள் தங்கள் கணவனோடே சேர்ந்து வாழ்கின்றனர். எந்நிலையிலும் படித்த பெண்கள் கண்டிப்பாக விவாகரத்தை எதிர்பார்ப்பார்கள்.

ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்!


தற்போது எல்லா நாடுகளிலும் விவாகரத்து அதிகரித்து வருகிறது. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட போதிலும் ஆண்மை குறைவு முக்கிய பிரச்சனையாக கூறப்படுகிறது. தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.
டெல்லியில் உள்ள பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரோக்கியமான திருமண உறவென்பது நீடிக்க வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று பிற ஆய்வுகளும் கூறிவருகின்றன.
ஆண்டுக்கு 58 முறை உடலுறவு அவசியம் என்று மற்ற ஆய்வொன்று தெரிவிக்கிறது. இன்றைய உலகில் சிறு வயதிலேயே இளைஞர்கள் கையில் பெரிய வேலை ஏகப்பட்ட பணம் போன்றவை அளவுக்கு அதிகமாக புழங்குவதால் குடி, கூத்து என்று சென்று உண்மையான செக்ஸ் என்று வரும்போது அவர்களுக்கு நாட்டமில்லாமல் போய் விடுகிறது.
மேலும் குடியால் 40 வயதிற்குள்ளாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவை ஏற்படும் வாலிப வயதினரை நாம் தினமும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம். இவையெல்லாம் அவர்களது செக்ஸ் நாட்டமின்மையை அதிகரித்து விடுகிறது. நாட்டமிருந்தாலும் வியாதி பயம் செயலிழக்கச் செய்து விடுகிறது.
40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது. புகைபிடிக்கும் பழக்கமும் செக்ஸ் உறவில் நாட்டத்தை குறைக்கிறது. கடுமையாக ஊதிக் கொண்டேயிருப்பவர்களின் மன நிலை கவனக்குவிப்பு தேவைப்படும் பாலுறவின்பால் ஈடுபட முடியாமல் செய்து விடுகிறது.
உயர் பணிகளில் இருக்கும் கணவன் மனைவிக்கோ இது பற்றியெல்லாம் யோசிக்கவே நேரம் இருப்பதில்லை இதனால் திருமண முறிவு ஏற்படுகிறது.
ஆண்மைக்குறைவை நேரடியாக, நேர்மையாக ஒப்புக் கொண்டு மருத்துவர்களை ஆண்கள் அணுகவேண்டும், மாறாக ஆணாதிக்கத் திமிரில், கோளாறையும் மறைத்து குற்றவுணர்வில் பெண்களை வதைப்பதை நிறுத்தினால் பாதி விவாகரத்தை குறைக்கலாம்.

தேவை ஆண்கள் தங்கள் குறைபாட்டை வெளிப்படையாக ஒப்ப்புக் கொள்வது. பிறகுக் சிகிச்சை எடுத்துக் கொள்வதேயாகும்.

அமெரிக்காவில் குடியேற ஆசையா? இதோ வழிகாட்டல்!



பச்சை அட்டை அதிஷ்ட குழுக்கல் (Green Card Lottery) என்று அழைக்கப்படும் 2015 அதிஷ்ட குலுக்கல் மூலம் பல்வகைமை குடியேற்ற வீசா நிகழ்ச்சித் திட்டம், ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க இராச்சிய தூதுவராலயம் அறிவித்துள்ளது.
பச்சை அட்டை அதிஷ்ட குழுக்கல் சீட்டு தொடர்பில் கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க இராச்சிய தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கை;
2013 ஒக்டோபர் 01ம் திகதி இலங்கை நேரம் பிற்பகல் 09.30 மணி முதல், 2013 நவம்பர் 02ம் திகதி பிற்பகல் 09.30 மணி வரை மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் இணையத்தளத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும்.
அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் பல்வகைமை குடியேற்ற வீசா வழங்கும் வருடாந்த நிகழ்ச்சித் திட்டம் இலங்கை, மாலைதீவு உட்பட தகைமை வாய்ந்த நாடுகளில் பிறந்தோருக்கு குடியேற்ற வீசா பெறும் வகையில நேர்காணலுக்கான ஒரு சந்தர்ப்பம் எழுந்தமானமாக வழங்கப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தில் சட்டபூர்வமான நிரந்தர குடிமக்களாகக் கருதப்படுவதற்கான குடிவரவு வீசாக்களுக்கு அவர்கள் தகைமை பெறுவார்கள்.
இந்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விபரமான ஆலோசனைகளையும், தகைமைகளையும் கண்டறிவதற்கு ஆர்வம் கொண்டுள்ளீர்களாயின் தயவு செய்து கொழும்பு அமெரிக்க தூதுவராலயத்தின் www.srilanka.usembassy.gov/visas/diversityvisa- lottery-program.html இணையத்தளத்தைப் பரிசீலிக்கவும்.
அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு விண்ணப்பிப்பதாயின் தயவுசெய்து www.dvlottery.state.gov இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
ஆலோசனைகள்:-
2013 ஒக்டோபர் 1ம் திகதி முதல் நவம்பர் 02ம் திகதி வரையிலான கால எல்லையில் அதிஷ்டக் குலுக்கலுக்கான விண்ணப்பப் படிவம் ஏற்றுக் கொள்ளப்படும்.
* இலங்கை, மாலைதீவு உட்பட ஒரு சில நாடுகளில் பிறந்தோருக்கு மாத்திரமே அதிஷ்டக் குலுக்கல் செல்லுபடியாகும்.
* ஒருமுறை மாத்திரமே நீங்கள் விண்ணப்பிக்க முடியும். பலமுறை விண்ணப்பித்தால் அதன் பெறுபேறாகத் தகைமையை இழக்க நேரிடும்.
* பல்வகைமை வீசாவிற்குத் தேவையான தகைமைகளான கல்வித் தகைமையையும், தொழில் அனுபவத் தகைமையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
எனவே, விண்ணப்பிப்பதற்கு முன்னர் உங்களுக்குத் தேவையான தகைமைகளையிட்டு நிச்சயித்துக் கொள்ளுங்கள்.
* இணையத்தளத்தில் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர், அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட இலக்கம் வழங்கப்படும். நீங்கள் வீசா நேர்காணலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என இந்த இலக்கத்தைக் கொண்டே பரிசீலனை செய்து பார்க்க முடியும்.
எனவே, இவ்விலக்கத்தைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்
இணையத்தளத்திற்கான விண்ணப்பம் முற்றிலும் இலவசமானது. எதுவித மறைமுகமான செலவுகளும் கிடையாது.
ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்தும் போலித் தனிநபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ ஏமாற வேண்டாம்.
தெரிவு செய்யப்படுவது தொடர்பில் முன்வைக்கப்படும் போலி உறுதிமொழிகளை நம்ப வேண்டாம்.
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கும் சமர்ப்பிப்பதற்கும் 3ம் தரப்பினருடைய உதவி தேவையில்லை.
அடுத்த நடவடிக்கை தொடர்பான அறிவித்தல்கள்!
2014 மே மாத ஆரம்பத்தில் விண்ணப்பதாரிகள் www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்தைப் பார்வையிட்டு வீசாவிற்கான நேர்காணலுக்கு நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என பரிசீலிக்க முடியும்.
நீங்கள் தெரிவு செய்யப்பட்டு இருப்பின் ஐக்கிய அமெரிக்கப் பேராளர் அதிகாரியோடு (U.S.Consular Officer) ஒரு நேர்காணல் இடம்பெறும்.

நீங்கள் வீசாவைப் பெறத் தகுதி பெற்றுள்ளீர்களா என அவரே தீர்மானிப்பார்.



Sunday, September 29, 2013

HOT NEWS-சந்திரிக்காவுடன் இணைந்து ரணில் சதித்திட்டம்


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டமொன்றை ரணில் விக்ரமசிங்க செயற்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.
அப்பன் பெயர் தெரியாத சிலரிடம் துஷ்டத்தனமான திட்டங்கள் இருக்கின்றன. ஐக்கிய தேசியக்கட்சியை பலமிழக்க செய்வதே அவர்களின் திட்டம்.

சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தை பெறும் திட்டமும் அவர்களுக்கு உள்ளது. இவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தாவிச் செல்லவே தருணம் பார்த்து காத்திருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Saturday, September 28, 2013

செல்போன்களால் கேன்சர் : எச்சரிக்கை


செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் ( புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.
பூச்சிக்‌கொல்லி மருந்துக்கு நிகர் :செல்போன்கள் கேன்சர் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.
செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
செல் போன் அறிவியல் தகவல்கள் இதோ: செல் போன்கள் ரேடியோ அலைவரிசைகளை பயன்படுத்தி இயங்குகிறது. இதை முறையே என்று அழைக்கலாம். அந்த வகையில் மிக குறைந்த சக்தி கொண்ட மின்காந்த அலைகளையே செல்போன் வெளியிடுகிறது. அந்த வகையில் இதை கதிர் வீச்சு என்று கூட அழைக்க முடியாது (காரணம் வெளிவரும் சக்தி மிக மிக குறைவு). மேலும்செல் போன்கள் வெளியிடும் கதிர்வீச்சுகளயே நாம் காலம் காலமாக உபயோகபடுத்தி வந்த ரேடியோகளும் வெளியிடுகின்றன. ஆனால் ரேடியோகளுக்கும்செல் போன்களுக்கும் உள்ள வித்தியாசம் நாம் உபயோகபடுத்தும் விதத்தில்தான் உள்ளது. அதாவது

நாம் செல் போன்களை உபயோகபடுத்தும்போது நாம் நம் உடற்பகுதியுடன் ஒட்டி தான் பயன்படுத்துகின்றோம். ஆனால் நாம் ரேடியோகளை அவ்வாறாக பயன்படுத்தியதில்லை. எனவே இந்த சக்தி குறைந்த ரேடியோ அலைகள் நம் உடல் திசுகளுக்குள்ளே மிக எளிதாக ஊடுருவி விடுகிறது. இதைதான் என்று அழைக்கின்றோம். இந்த செல் போன் கம்பனிக்கு கம்பெனி மாடலுக்கு மாடல் வேறுபடுகிறது.
எனவே செல் போன்கள் வாங்கும்போது நல்ல தரமான கம்பனிகளை தேர்வு செய்து வாங்குங்கள். அதற்கு முன்னால் அந்த குறிப்பிட்ட மாடல் செல் போன்களின் SAR 1.6watt/kg இருக்கிறதா என்பதை ஊர்ஜிதம் செய்த பிறகே வாங்குங்கள். செல்போன்கள் அலைகள் உடனடியாக நம் உடம்பில் மாற்றங்களை கொண்டு வரும் அளவிற்கு சக்தி வாய்ந்தது அல்ல…ஆனால் காலப்போக்கில் கண்டிப்பாக மாற்றங்களை கொண்டு வரும் என்பது சத்தியமே. இதை வியாபார நோக்கத்திற்காக கம்பனிகள் கூறுவதில்லை என்பதும் உண்மையே. சரிகாலப்போக்கில் என்னென்ன நோய்கள் செல் போன்களால் வர வாய்ப்பு உண்டு1. Headache 2. Alzheimer’s disease மிக கொடிய வகை மறதி நோய் உயிரை குடிக்கும் வல்லமை இதற்கு உண்டு) நரம்புகளை முடக்கும் வியாதி) 4. Brain tumour மூளை புற்றுநோய்) உடற்தளர்ச்சி )ஆம். இவை அனைத்தும் சத்தியமான உண்மையே! ஆனால் உங்கள் உடற் எதிர்ப்பு சக்தியை பொருத்து இவை எதுவும் வராமலோ அல்லது மிக குறைந்த அளவிலோ பாதிப்புகளை உருவாக்கலாம்.
அல்லது மிக சீக்கிரமாகவும் பாதிப்புக்கு உள்ளாகலாம். கண்டிப்பாக நம்மால் செல்போன்களை இழந்து வாழ முடியாது.

ஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி ஆற்றிய உரை: தமிழில்


தலைவர் அவர்களே!  சிறப்பு அதிதிகளே!  கனவான்களே!  சீமாட்டிகளே! கென்யாவின் சந்தைத் தொகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் தமது அன்புக்குரியவர்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு முதலில் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சுமார் மூன்று தசாப்தங்களாக எண்ணிக்கையில் அதிகளவிலான பயங்கரவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டிருந்த நாம் இந்த கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்கின்றோம்.
தலைவர் அவர்களே!
ஐக்கிய நாடுகள் அரசுகளுக்கிடையில் ஒத்துழைப்பை தொடர்ச்சியாக உறுதிப்படுத்தி விவாதத்திற்குட்பட்டதும் விவாதத்திற்குட்படாததுமான பல விடயங்களைப்பற்றி கலந்துரையாடுவதற்காக உலக மேடை ஒன்றை வழங்கியுள்ளது. உலக அமைப்பின் அத்தியாவசிய அடிப்படையாக இருக்கின்ற நாடுகளை சமமாக நடத்துகின்ற கோட்பாட்டை பாதுகாத்துக்கொள்வதும் அதிலேயே இணைந்திருப்பதும் நாம் கட்டாயமாக செய்யவேண்டிய பணியாகும்
பொருளாதார மற்றும் அரசியல் என்ற எந்த விடயத்திலும்கூட அனைத்து சர்வதேச நடவடிக்கைகளின் அடிப்படையாக இருக்க வேண்டியது சமத்துவமாகும்.ஐக்கிய நாடுகளின் செயலாற்றுகையை ஆராய்கின்றபோது முக்கியமான அடிப்படை பிரச்சினைகளை மூடிமறைத்து அரசியல் தன்மை கொண்ட விடயங்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பதைக் காண முடிகிறது.
அது உலக சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற சிறப்புரிமை குறைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களை பாதகமான முறையில் பாதித்துள்ளது. புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி நோக்கங்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதுநன்னோக்கமுள்ள எதிர்பார்ப்புக்களை உருவாக்கியுள்ளது.
அதன் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் இறுதி காலப்பகுதியை துரிதமாக நெருங்கிக்கொண்டிருப்பதனால் அது தொடார்பான முன்னேற்றத்தை ஆராய்கின்ற தற்போதைய அமர்வின் தொனிப்பொருள் காலத்திற்கு உகந்த பெறுமதியை உரித்தாக்கிக்கொள்கின்றது.
நாடுகளுக்கிடையிலும் நாடுகளுக்குள்ளும் சமச்சீரற்ற பெறுபேறுகள் காணப்பட்டாலும் அபிவிருத்தி நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் விடயத்தில் பாராட்டக்கூடிய முன்னேற்றத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. உலக வங்கியின் கணிப்பீட்டின் பிரகாரம் 2015ஆம் ஆண்டளவில் மிக மோசமான வறுமையில் வாழ்கின்ற அபிவிருத்தி அடைகின்ற உலகின் சனத்தொகையில் சுமார் 40வீத்திற்கு உப சகாரா ஆபிரிக்காவும் தெற்காசியாவும் இல்லமாக அமைகின்றன.
இப்போக்கு எமது நல்லுணர்வுகளுக்கு தடை ஏற்படுத்திவிடும். வறிய மக்களின் நிலையை மேம்படுத்த தவறியது ஏன் என்பதை ஐக்கிய நாடுகள் ஆராய்ந்து அறிய வேண்டும்.இலங்கையை எடுத்துக்கொள்கின்றபோது, வளர்ச்சியின் பயன்களை மக்கள் தொகையின் அனைத்து பிரிவுகளுக்கிடையிலும் பகிர்ந்தளித்தல் மற்றும் சமச்சீர்தன்மை, சமூக ரீதியான புறக்கணிப்பு மற்றும் பாதகமான சூழல் விளைவுகள் என்பவற்றைத் தடுத்தல் எனது நோக்கமாக இருந்தது. எனது நாடு அடைந்துள்ள சமூக பொருளாதார வெற்றி மக்களை மையமாகக் கொண்ட அரச கொள்கைகளின் பெறுபேறாகும்.
தலைவர் அவர்களே!
உலகத்தில் மிகவும் கொடூரமான பயங்கரவாத குழுவுடனான போராட்டம் 2004ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தம், உலக உணவு, வலுசக்தி, நிதி என்பவற்றின் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி நோக்கங்களை நிறைவேற்றிக்கொண்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
புள்ளிவிபரங்கள் அதற்கு சாட்சியாக இருக்கின்றன. இலங்கை 2012ஆம் ஆண்டில் மனித அபிவிருத்தி சுட்டியில் 187 நாடுகளுக்கிடையில் 92வது இடத்தில் இருந்தது. 15.2 % மாக இருந்த கடுமையான வறுமை ஐந்து ஆண்டுகளின் பின்னர் 2012ஆம் ஆண்டு 6.5% வரை வீழ்ச்சியடைந்தது. இது புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி நோக்கங்களுக்கான இடைவருட இலக்கை விஞ்சிச் சென்றதாக அமைகின்றது.
உலக ஆரம்பக்கல்வி நோக்கத்தை 2015ஆம் ஆண்டளவில் இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். சிசு மரண வீதம் மற்றும் உயிருள்ள 1000 பிறப்புகளுக்கு 9.4 வரை குறைவடைந்தமை சிறப்புமிக்க நிகழ்வாக யுனிசெப் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ள சுகாதாரத் துறையில் இலங்கைப் பெற்றுள்ள வெற்றிகளுக்கிடையில் இதுவும் ஒன்றாகும்.
சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் உலகத்தில் முதலாவது பெண் பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் அரசியல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தியில் பெண்கள் நிறைவேற்றுகின்ற தீர்க்கமான கடமைப் பொறுப்புக்களை முன்கூட்டியே அடையாளம் கண்ட ஒரு நாடாக இலங்கை பெருமிதம் அடைய முடியும். இலங்கை உலக ஆண் பெண் சமத்துவ சுட்டியில் 16வது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது
தலைவர் அவர்களே!
2015ஆம் ஆண்டின் பின்னர் தமது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இளைஞர்களுக்கு முன்னுரிமையளித்துள்ள இலங்கை இளம் சந்ததியினரின் எதிர்பார்ப்புகளை சர்வதேச ரீதியில் மேம்படுத்துவதில் முன்னணியில் திகழ்கிறது. இலங்கை 2013 நவம்பர் மாதம் பொதுநலவாய இளைஞர் இயக்கத்திற்கும் 2014 மே மாதம் ஐக்கிய நாடுகளின் உலக இளைஞர் மகாநாட்டுக்கும் அனுசரணை அளிக்கிறது.
உலக மகாநாட்டின்போது வாலிபத்தை நினைவுகூர்வதற்கு ஒன்று சேருங்கள் என அனைவருக்கும் இச்சந்தா்ப்பத்தில் நான் அழைப்பு விடுக்கின்றேன். இளைஞர்களின் திறன் விருத்தி வறுமையைக் குறைப்பதற்கு வழிகாட்டுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் முகமாக “சர்வதேச திறன் தினத்தை” பிரகடனப்படுத்தப்படும்படி ஐக்கிய நாடுகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
புதிய சந்ததியினா்வசமுள்ள திறன்களையும் ஜனநாயகம் தொடர்பான புரிந்துணர்வையும் கூர்மைப்படுத்துவதற்கும் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களை தயார்படுத்துவதற்கும் இளைஞர் பாராளுமன்றத்தை ஸ்தாபித்தமை ஆக்கப்பூர்வமான அபிவிருத்தியாக இருந்தது.
அங்கத்துவ நாடுகள் புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் மார்க்கத்தை தனிப்பட்ட முறையில் தீர்மானிப்பது மிக முக்கியமானதாகும். இச்செயற்பாடுகளை திட்டமிடுகின்றபோது அந்தந்த நாடுகளின் தனித்துவமான சமூக கலாசார பழக்கங்களையும் பாரம்பரியங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலைவர் அவர்களே
2015ஆம் ஆண்டின் பின்னர் அபிவிருத்தி ஒழுங்குப்பத்திரத்தைத் தயார்த்தல் றியோ+20 மகாநாட்டின் பெறுபேறுகளுடன் உடன்பட்ட கோட்பாடுகளுடன் இணைந்த அரசாங்கங்களுக்கிடையிலான செயற்பாடாக இருக்க வேண்டும். முன்னேற்றமடைந்த பொருளாதாரத்தின் பல நூற்றாண்டுகளின் அபிவிருத்தி அடைகின்ற உலகின் வளர்ச்சிக்கு சவால் விடுத்து எஞ்சியிருப்பது குறுகிய காபன் அண்டவெளி மாத்திரமே.
பொருளாதார அபிவிருத்திக்கும் சூழல் பாதுகாப்புக்குமிடையில் மெல்லிய ரேகையை சமச்சீருடன் பேணுவது எதிர்கால அபிவிருத்தி கொள்கை தயாரிப்புக்கு பெரும் சவாலாக இருக்கின்றது. ஆகவே பொதுவான ஆனால் மாறுபட்ட பொறுப்புக்கள் என்ற அடிப்படையில் சூழல் அழிவுக்கு நட்டஈடு செலுத்துவதன் மூலம் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவது மிகத் தீர்க்கமானதாகும்.
வறுமையை ஒழித்தல் மற்றும் அபிவிருத்தி அடைகின்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தல் 2015ஆம் ஆண்டின் பின்னர் அபிவிருத்தி ஒழுங்குப்பத்திரத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். நிலைபேறான அபிவிருத்தியூடன் சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு அபிவிருத்தி தொடர்பான சமச்சீரான அணுகுமுறை அவசியமாகும். உயர் முதலீட்டு வீதங்கள் மனித மூலதனத்தின் பண்பு ரீதியான பெறுமதி என்பவற்றைப் பலப்படுத்துதல். தொழில்நுட்பத்தை ஒப்படைத்தல், நிலைபேறான அபிவிருத்திக்கு தீர்க்கமானதாக அமைகிறது.
றியோ- 20 மகாநாடு அங்கீகாரம்பெற்ற நிதி தயாரிப்பையும் தொழில்நுட்ப பொறிமுறையையும் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும். நிலைபேறான அபிவிருத்தியின் பொருட்டு நிதி தயாரிப்பு மூலோபாயத்தை தயாரிக்கின்ற போது அபிவிருத்தி அடைகின்ற நாடுகளுக்கு முன்னார் இருந்ததைவிட அதிகமாகவும் நம்பிக்கை வைக்கக்கூடிய நிதி உதவிகளுக்காக வாய்ப்பளிக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் செயலாளார் நாயகத்தின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கமைவாக ஐக்கிய நாடுகளின் கீழ் தொழில்நுட்ப விஞ்ஞான வசதிகள் பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு இலங்கை ஒத்துழைப்பை தெரிவிக்கிறது. உரிமைகளின் அடிப்படையிலான அனுகுமுறைகள்பற்றி உரையாற்றுகின்ற அதிகாரமுள்ளவர்கள் அபிவிருத்தி அடையும் நிதி தயாரிப்புகளின் பொருட்டுள்ள தமது சர்வதேச கடப்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டும்.
தற்போதைய சர்வதேச நிதி நிறுவனங்களின் புனரமைப்பதற்கான கோரிக்கைகள் தொடர்ந்தும் செல்லுபடியாகும் நிலையில் இருக்கின்றன. அவர்களின் முறைசாரா கொள்கைகள் நீண்டகால ரீதியல் உற்பத்தித்திறன்மிக்கவைகளாக இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.
சர்வதேச நிதி மற்றும் நிதியங்களை தயாரிக்கின்ற நிறுவனங்கள் அபிவிருத்தி அடைகின்ற உலகில் பிரபல்யமான குரல் எழுப்புவதற்கு இடமளிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். அத்துடன் பொருளாதார ரீதியாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ள நாடுகள் மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்தும் தமது பழக்கத்தை கைவிட வேண்டும்.
தற்போது முழுமை பெறாமல் உள்ள உலக பொருளாதார முறை தொடர்பாக பரிபூரணமான கட்டமைப்பு ரீதியான புனரமைப்பு தற்போதைய யதார்த்தங்களை முற்று முழுதாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.அபிவிருத்திக்காக கூட்டுப் பங்காண்மையை மீள அணிதிரட்டும் பொருட்டு நியாயமான சர்வதேச பொருளாதார முறையொன்று உலகத்திற்கு அவசியமாக இருக்கின்றது.
அரச மற்றும் அரச சார்பற்ற பிரிவுகள் உயர் நிலையில் உள்ள கம்பனிகள் அதில் புதிய பங்காளாக்களாக சேர வேண்டும். பொருளாதார அதிகாரம் மாறுவதன் காரணமாக “வடக்கு – தெற்கு ஒத்துழைப்புக்கு” குறை நிரப்பாக “தெற்கு –தெற்கு ஒத்துழைப்பை” செயலூக்கத்துடன் மேம்படுத்த வேண்டியது மிக தீர்க்கமானதாகும்.
தலைவர் அவர்கள!
ஒரு சில நாடுகள், பாதுகாப்பை காரணமாகக்கொண்டும் மனித உரிமைகளின் பாதுகாவலராகவும் தோற்றி அபிவிருத்தி அடையும் நாடுகளின் உள்முக நடவடிக்கைகளில் தலையிடும் போக்கு அதிகரித்திருப்பதை சர்வதேச துறைகளில் காணக்கூடியதாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இதன் பெறுபேறாக வன்முறைக்கும் அமைதியின்மைக்கும் அடையாளமாக இருக்கின்ற பலவந்தமான அரசியல் வேறுபாடுகளுக்கு காரணமாக அமைகின்ற கலவரங்களை நாம் உலகம் முழுவதிலும் தொடர்ச்சியாக காண்கின்றோம்.
இத்தகைய இயக்கங்கள் மேற்படி நாடுகளில் மிக நல்ல நிலைப்பாட்டிற்கு காரணமாக இருக்கின்றனவா அல்லது பொருத்தமற்ற புற காரணிகளினால் வேறுபட்ட பெறுபேறுகளை உருவாக்கியுள்ளனவா என்பதை சிந்தித்து பார்ப்பதற்கான காலம் வந்துள்ளது. உண்மை யாதெனில் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எதிர்பார்த்த நல்ல பெறுபேறுகள் கிடைக்கவில்லை.
அத்துடன் இந்நாடுகளை நிலையற்ற தாக்குவதற்கு உண்மையிலேயே பங்களிப்பு செய்துள்ளது என்பதாகும். ஒருதலைப்பட்சமான குழுக்கள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்பு சபையின் ஆதிக்கம் சீர்குலைவுக்கு உள்ளாகாதா?மக்களின் நல்வாழ்வுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ள துறைகளுக்கு இப்போக்கு பரவியுள்ளதன் காரணமாக அதை நிறுத்த வேண்டியுள்ளது.
பெரும்பாலும் மாறுபட்ட கலாசாரங்கள், விழுமியங்கள்இ வரலாறுகள் என்பவற்றைக் கொண்டுள்ள நாடுகளின் ஒரு வகையிலான ஜனநாயகத்தை நடத்துவதற்கு மேற்கொள்கின்ற முயற்சியின் காரணமாக இந்த குழப்ப நிலை உருவாகுகிறது. பல்தரப்பு பங்கேற்புடன் சர்வதேச பாதுகாப்பை உறுதி செய்வதற்கு குறிப்பாக ஐக்கிய நாடுகள் அதிகாரம் கொடுத்திருந்த போதும் சில நாடுகளில் இது போன்ற நடவடிக்கை உலகத்திற்கு அவசியமில்லை.
நமது காலத்தில் இப்பங்கேற்பு முழுமையடைய வேண்டுமானால் அணுவாயுதங்கள் மற்றும் இரசாயன ஆயுதங்களின் தோற்றத்தில் நவீன விஞ்ஞானம் பகை உணர்வுடன் துஷ்பிரயோகிக்கப்படுவதற்கு எதிராக மனித வர்க்கத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.
தலைவர் அவர்களே!
மத்திய கிழக்கில் வளர்ச்சியடைகின்ற நிச்சயமற்ற தன்மைகள் மனவேதனையை ஏற்படுத்துகின்றது. 1967ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டு எல்லையின் அடிப்படையில் பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்குமிடையில் சக சீவனத்தை நாம் ஆசையுடன் எதிர்பார்த்தோம். பலஸ்தீனத்தை ஐக்கிய நாடுகளின் பூரண அங்கத்துவராக ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை காத்திருக்கிறது.
மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார சுபீட்சத்தையும் பெற்றுக்கொள்வதற்கு ஆபிரிக்க மக்கள் எடுக்கின்ற முயற்சிக்கு மரியாதை செலுத்துகிறௌம். ஆபிரிக்க மக்கள் தொடார்ந்து சமூக பொருளாதார வளார்ச்சியை நோக்கிச் செல்கின்ற பயணத்தின்போது இலங்கை தொடார்ச்சியாக அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் என்பதை தெரிவிக்கிறது.
தலைவர் அவர்களே
நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் பொருளாதார தடைகள் போன்ற ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகள் கவலையை ஏற்படுத்துகின்றது. இத்தகைய நடவடிக்கைகள் தனித்துவமாக இலக்குபடுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமன்றி எத்தகைய நியாயமும் இல்லாமல் மனித வர்க்கத்தின் பெருந்தொகையானவர்களுக்கு துன்ப தொல்லைகளை ஏற்படுத்துகின்றது. பொருளாதார வெற்றி கொள்வதற்கும் பொருளாதார வாய்ப்புகளை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கும் மேற்கொள்கின்ற முயற்சிக்காக நான் மீண்டுமொருமுறை கியூபா மக்களுடன் ஒத்துழைப்புடன் எழுந்து நிற்கின்றேன்.
என்னுடைய நாட்டில் முரண்பாட்டின் பிற்பட்ட காலப்பகுதியின் அபிவிருத்தியை சுருக்கமாக தெரிவிப்பதற்கு எனக்கு வாய்ப்பளியுங்கள். மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற பிரிவினைவாத பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அபிவிருத்தியுடனும் நல்லிணக்கத்துடனும் இணைந்துள்ள சிக்கல்களை அணுகுவதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது என்பதைப்பற்றி நான் பெருமை அடைகிறேன்.
மக்களின் கருத்தின்மூலம் பிரதிபலிக்கின்ற முன்னுரிமைகளுக்கு எப்பொழுதும் கூருணர்வுடன் இருக்கின்ற இலங்கை அரசு இத்துறைகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்காக உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
வட மாகாணத்தில் வாழ்கின்ற மக்களுக்கு மாகாண சபைக்கான தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலின்போது கிடைத்த சந்தர்ப்பமானது இது தொடர்பான முக்கியமான நிகழ்வாகும்.
சுமார் கால் நூற்றாண்டின் பின்னர் அதை செய்யக் கிடைத்தமை எனக்கு சட்டப்பூர்வமான திருப்தியைத் தரும் விடயமாகும். அரசியல் அதிகாரமளித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களை கவனத்தில் எடுத்துக்கொள்கின்றபோது இந்நடவடிக்கையின் தீர்க்கமான முக்கியத்துவத்தைப்பற்றி சந்தேகம் இருக்க முடியாது.
இலங்கைவாழ் அனைத்து மக்களின் நன்மைக்காக இம் முயற்சிக்கும் அவற்றின் வெற்றிக்கும் உதவுவதற்கு சர்வதேச சமூகத்திற்கு தெளிவான பொறுப்பு இருக்கிறது.
தலைவா் அவா்களே!
தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்ற முன்னேற்றத்தையும் ஐக்கிய நாடுகளின் பொறிமுறையுடன் நிலைபேறான பங்கேற்பையும் பொருட்படுத்தாமல் இலங்கை மீது காட்டப்படுகின்ற சமச்சீரற்ற தெரிவிப்பைப்பற்றியும் பல்தரப்பு வரையறையின்மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமநிலையற்ற கவனிப்பையும்பற்றி பெரும்பாலான நாடுகள் ஆச்சரியப்படுகின்றன. இந்த இடைவெளியில்லாமல் பின் தொடர்கின்ற அடிப்படையும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.
பயன்பாட்டுத் தரத்தின் நிலைபேறானத்தன்மையை சான்றுப்படுத்தும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் முறையை துணிச்சலுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அவ்வாறு செய்கின்றபோது தமது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்கொள்வதற்கு அக்கறை காட்டுகின்ற தரப்பினா; ஐக்கிய நாடுகளின் முறையை முறைகேடாக பயன்படுத்துகின்றனர் என்பதற்கு சந்தேகம் நிலவுவதற்குள்ள வாய்ப்புகள் இல்லாமல் போகும்.
அர்ப்பணிப்புடனும் முயற்சியுடனும் வாழ்க்கையை மிகவும் சவால்மிக்க மற்றும் உண்ணத இலட்சியத்தை வெற்றிகொள்ளும் சாத்தியம் மனிதனுக்கு இயற்கையாகவே உரித்தாகியுள்ளது. எமது கூட்டு முயற்சியினால் இந்த பெறுபேறுகள் அனைத்து மனித வர்க்கத்துக்கும் பயனளிக்குமென நான் நம்புகிறேன். புத்த பெருமானின் போதனையின்படி
“அத்தாகி அத்தனோ நாத்தோ”
“தன் கையே தனக்கு உதவி”
இந்த எக்காலத்தற்கும் உகந்த அறிவுரை உலகத்தின் தலைவிதியை தீர்மானிப்பதற்குப் பயன்பெறுமாக!
மும்மணிகளின் ஆசீர்வாதம் கிட்டுக!
நன்றி-

NH-

ஆண்கள் இளமையாக தெரிய சில சரும பராமரிப்புகள்…


ஆண்களில் சிலரை பார்த்தால் வயது 50 அல்லது 60ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர்.
இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்கவைத்துக் கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல.
மாறாக கொஞ்சம் முயற்சித்தால் வயது ஏறிகொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.
நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட் காலமும் நீடித்து இருக்கும்.
அப்படி என்றும் இளமையுடன் இருக்க இதோ சில டிப்ஸ்(ஆண்களுக்கு மட்டும்)
நாம் அதிகமாக சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க சிறந்த முதுமை தடுப்பு(ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படுத்தவது நல்லது.
மேலும் அதிகமான தண்ணீர் பருகுதல் சருமத்தை பாதுகாக்கும்.
பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 விழுக்காடு கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது.
உடல் கூறுவியலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.
தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது.
மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.
ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும்.
மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.
சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடிக்கொண்டே போகும்.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணி கூறும் ஜனாதிபதி !



இலங்கையில் மத சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகிறது அதை தடுக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அல் ஜஸீரா ஊடகவியலாளர் Video ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  கேள்வி முன்வைத்த போது .
மஹிந்த ராஜபக்ஷ இப்படி பதில் வழங்கியுள்ளார்:- ,அப்படிஇல்லை..! , .. , சில சம்பவங்கள் , தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. அவற்றுக்கான பின்னணியை…  ஏன் அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று நீங்கள் கண்டிப்பாக  பார்க்க வேண்டும்.
சில சம்பவங்கள் , ஆறு , ஏழு  வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்பட்டுள்ளாள். அப்போது இயற்கையாக  அவர்கள் சென்று அவர்களை தாக்குவார்கள் அவர்கள் எந்த சமூகத்தவர்களாக , மதத்தவர்களாக  இருந்தாலும் சரி , மக்கள் இதை கேள்விப் படும்போது குழப்பம் அடைவார்கள் . இதேபோன்ற சம்பவங்கள் சில  இடம்பெற்றிருக்கிறது. எல்லா சம்பவங்களுக்கும் சில பின்னணிகள்     உண்டு.
நாளை நினைக்கிறேன்   இந்த நாட்டில்தான் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும்  கத்தோலிக்கர்கள் , கிறிஸ்தவர்கள் கூட தமது மதத்தை எந்த பிரச்சினையும் இன்றி அனுஷ்டித்துவருகிறார்கள்
227 சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளது என்று நவநீதம் பிள்ளை கூறுகிறார் ….  என்று கேள்வி முன்வைக்கப் பட்டபோது.
இல்லை .இது அனைத்து அர்த்தமற்றவை . அந்த பட்டியலை என்னிடம் தாருங்கள் நான் பார்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அல்ஜஸீரா ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க.... அரசாங்கத்தின் ஆசீர்வாதாத்துடன் பொது பல சோவை இயக்குகின்றனர


முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநயாக்க: இந்த நாட்டில் புதிதாக தோற்றம்பெற்றுள்ள சில பௌத்த அமைப்புக்கள்  இனங்களுக்கிடையில் பாரிய பிளவுகளை ஏற்படுத்துகின்றன. பொதுபலசேனாவின் தலைமை ஆமதுரு ஒருவர்  அண்மையில் ஊடகங்களில் தெரிவித்த கருத்தை பார்க்கின்றபோது இந்த நாடு எங்கு நோக்கிச் செல்கின்றது? என கேள்வி எழுப்பிய முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க .
“முஸ்லிம் கடைகளில் சிங்கள மக்களை பொருட்கள் வாங்கவேண்டாம் .; என்றும் மேலும் முஸ்லிம்களது ஹோட்டலில் தேநீர்  வாங்கிக் குடிக்கின்றீர்கள். அவர்கள் தேயிலைத் கிளாசுக்குள் மூன்று முறை துப்பிவிட்டுத்தான் உங்களுக்கு தேயிலையை தருகின்றார்கள் என பொதுபலசேன சிங்கள மக்களுக்கு ஊடகங்களிலும் வெப்தளங்களிலும் சொல்லி வருகின்றது.
இதை இந்த நாட்டில் பௌத்த தர்மத்தை பேசுகின்ற அந்த மஞ்ச சீலையை அணிந்தவர்கள் பேசுகின்றார்களே இதனை ஏனைய பௌத்த குருமார்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றிர்களா ? எனவும்  முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க அங்கு இருந்த தேரர்களைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.
இந்த அரசாங்கத்தின் ஆசீர்வாதாத்துடன்  பொதுபலசோவை இயக்குகின்றனர். அதற்கான பாதுகாப்பு மற்றும் சகலதையும் அரசே வழங்கி வருகின்றது. அதே போன்று இந்த அரசின் பங்காலிக் கட்சியான விமல் வீரவன்ச  ராவனா பலய என்ற இயக்கத்தை இயக்குகின்றார். பாட்டலி சம்பிக்க ரணவக்க சிகல உருமய கட்சியை பலப்படுத்துகின்றார் இவை அணைத்தும் அரசினாலே அவர்களது பௌத்த அரசியல் செல்வாக்கை செலுத்துவதற்கு இவ்வாறான இனவாத இயக்கங்களை இயக்கி வருகின்றனர்.  எனவும் அவர் தெரிவித்தார்.
அமரர் பண்டாரநயாக்காவின் நினைவு தினம் அவரது சிலை அமைந்துள்ள கொரகொல்லையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார்.

இந் நிகழ்வின்போது திகாரிய அங்கவீனர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க வினால் உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரட்ன, மேல்மாகாண ஆளுனர் அலவிமௌலானா முன்னாள் இரானுவத் தளபதி சரத்பொண்சேகாவும் கலந்து கொண்டான். பெருந்தொகையான் பௌத்த மதகுருக்களும் கலந்து கொண்டனர்.

Friday, September 27, 2013

இளம் பெண்களின் ஆபாச வீடியோக்களுக்கு : மூலகர்த்தா இவர்களே..!

 http://www.thulikal.com/wp-content/uploads/2013/07/sex-phone.jpg
பெண்களின் ஒவ்வொரு செயலும் படம்பிடிக்கப்படுகின்றன. அவர்கள் குளிப்பது, உடை மாற்றுவது மட்டுமில்லை. குனிந்து தரையை துடைப்பது, துணி துவைப்பது, குழந்தைக்கு பால் கொடுப்பது.. போன்ற ஒவ்வொன்றும் படமாக்கப்படுகிறது. ஓட்டல் அறைகளில், துணிக்கடையில் உடையை அணிந்து சரிபார்க்கும் அறையில், ஓட்டல் கழிப்பிடங்களில், பெண்கள் கூடும் இடங்களில் எல்லாம் அதற்காக ரகசிய குட்டி கேமிராக்களை பொருத்திவைத்திருக்கிறார்கள்.
அவைகள் படம்பிடிக்கும் அந்தரங்க காட்சிகளை இணையதளத்தில் போட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் நீங்களே இணையதளங்களில் பார்த்தால், உங்களுக்கு நெருக்கமான தோழிகள் படமோ, ஏன் உங்கள் படமோகூட இருக்கலாம். இந்திய பெண்கள் சமூகத்தில் இது ஒரு புதிய கலாசார சிக்கலை தோற்றிவித்திருக்கிறது.
முன்பெல்லாம் பாதுகாப்பு நலன் கருதி வங்கிகளிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் ரகசிய கேமிராக்களை வைத்திருந்தார்கள். இப்போது கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன. இதை பெண்களின் அந்தரங்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் சிலர் பயன்படுத்துகிறார்கள்.
அங்கே பதிவு செய்யப்படும் காட்சிகளில் பெண்களின் அந்தரங்கம் தொடர்புடையவைகளை மட்டும் அடுத்த நாளே யூடீப் போன்ற ‘வீடியோ ஷேரிங் சைட்’களில் போட்டுவிடுகிறார்கள். அதை உலகம் முழுவதும் உள்ள ‘செக்ஸ் ஊனம்கொண்ட ஆண்கள்’ பார்க்கிறார்கள். சிலர் பார்த்து ரசித்த வீடியோக்களை பேஸ் புக்கிலோ, கூகுள் பிளஸ்சிலோ பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஆபாச நீலப் படங்களை பார்த்து ரசித்து அலுத்துப்போன பல செக்ஸ் ஊன மனிதர்கள் இப்போது, இத்தகைய யதார்த்த அரைகுறை காட்சிகளை பார்ப்பதிலே அதிக ஆர்வம் காட்டிவருகிறார்கள். அவைகளை பார்த்துவிட்டு, ‘யதார்த்த காட்சிகள்’ என்று மெய்சிலிர்த்து பேசுகிறார்கள். அந்தரங்கங்களை படம்பிடிக்க இப்போது குட்டிக்குட்டி கேமிராக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.
அதனை சுவர்கடிகாரம், வாட்ச், பேனா, டை போன்றவைகளில் எல்லாம் பொருத்திக்கொள்கிறார்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் போட்டோ பிரேம், குளிர்பான பாட்டில்கள், கண்ணாடி, சூயிங்கம் பாக்கெட் போன்றவைகளில்கூட அந்த குட்டி கேமிராக்களை ஒட்டி வைத்துக்கொள்ளலாம்

ஆண்களிடம் பெண்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன…?

http://static.guim.co.uk/sys-images/Lifeandhealth/Pix/pictures/2009/3/6/1236360305286/Man-and-woman-in-bed-001.jpg
அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை.

நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும்.
பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும்.
உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள். நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும்.
இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும். திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் உடலுறவு என்பது பிரிக்க முடியாதது. எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனுபவிக்க வேண்டும்.
இந்த விசயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அமரலாம். தனது வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
பல விசயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். எனவே எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை மனரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள். மடியில் தலைசாய்ப்பது, விரலால் தலைகோதுவது, அன்பான, ஆறுதலான முத்தம், என சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை.

இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது. நேரடியாக விசயத்தை தொடங்குவதை விதம் விதமான முன் விளையாட்டுகளை விளையாடுங்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாலே உறவுகளில் விரிசல் விழ வாய்ப்பில்லை.

SOLVE IF YOU ARE GENIUS!

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/946332_517857128306208_982156980_n.jpg

20 நிமிடங்களில் பயணம்; கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலை அடுத்த மாதம் திறக்கப்படும்

http://metronews.lk/uploads/news/2300Colombo-Katunayake350.jpg
http://metronews.lk/uploads/news/2300Colombo-Katunayake-Expressway600.jpg

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி !!!

http://timesofindia.indiatimes.com/photo/11218362.cms
மனைவியுடன் தனுஷ் சமீபத்தில் பல நாட்களாகப் பேசுவதில்லை. தனுஷ¨டன் ஒரு இளம் நடிகை உறவை பலப்படுத்திக் கொண்டதால், மனைவி தனுஷ் மீது செம கடுப்பில் இருக்கிறார். வெளிப்பார்வைக்கு தனுஷ் அப்பாவியாகத் தெரிகிறார். ஆனால் பல விஷயத்தில் தீரர். அதனால்தான் சுருதிஹாசன் தனுஷிடம் ரொம்பவே நெருக்கமாக இருந்தார். பொதுவாக படத்துக்குப்படம் கதாநாயகிகளை மாற்றும் தனுஷ்க்கு அனைத்து நடிகைகளுடன் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆவதோடு எல்லா நடிகைகளும் தனுஷ் அணுகுமுறையை பாராட்டுகிறார்கள். இருந்தாலும் மனைவி ஐஸ்வர்யாவை பார்ப்பதையே தவிர்க்கும் தனுஷ், தன் குடும்பத்தில் புயல் வீசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இவர்களது மோதல் முற்றுவதை பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுவார்கள் என்று தெரிகிறது.
மனைவியுடன் தனுஷ் சமீபத்தில் பல நாட்களாகப் பேசுவதில்லை. தனுஷ¨டன் ஒரு இளம் நடிகை உறவை பலப்படுத்திக் கொண்டதால், மனைவி தனுஷ் மீது செம கடுப்பில் இருக்கிறார். வெளிப்பார்வைக்கு தனுஷ் அப்பாவியாகத் தெரிகிறார்.

ஆனால் பலான விஷயத்தில் தீரர். அதனால்தான் சுருதிஹாசன் தனுஷிடம் ரொம்பவே நெருக்கமாக இருந்தார். பொதுவாக படத்துக்குப்படம் கதாநாயகிகளை மாற்றும் தனுஷ்க்கு அனைத்து நடிகைகளுடன் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆவதோடு எல்லா நடிகைகளும் தனுஷ் அணுகுமுறையை பாராட்டுகிறார்கள்.

இருந்தாலும் மனைவி ஐஸ்வர்யாவை பார்ப்பதையே தவிர்க்கும் தனுஷ், தன் குடும்பத்தில் புயல் வீசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இவர்களது மோதல் முற்றுவதை பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுவார்கள் என்று தெரிகிறது. - See more at: http://www.tamilspace.com/2013/09/actor-dhanush-is-getting-a-divorce.html#sthash.byoZ62le.dpuf
மனைவியுடன் தனுஷ் சமீபத்தில் பல நாட்களாகப் பேசுவதில்லை. தனுஷ¨டன் ஒரு இளம் நடிகை உறவை பலப்படுத்திக் கொண்டதால், மனைவி தனுஷ் மீது செம கடுப்பில் இருக்கிறார். வெளிப்பார்வைக்கு தனுஷ் அப்பாவியாகத் தெரிகிறார்.

ஆனால் பலான விஷயத்தில் தீரர். அதனால்தான் சுருதிஹாசன் தனுஷிடம் ரொம்பவே நெருக்கமாக இருந்தார். பொதுவாக படத்துக்குப்படம் கதாநாயகிகளை மாற்றும் தனுஷ்க்கு அனைத்து நடிகைகளுடன் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆவதோடு எல்லா நடிகைகளும் தனுஷ் அணுகுமுறையை பாராட்டுகிறார்கள்.

இருந்தாலும் மனைவி ஐஸ்வர்யாவை பார்ப்பதையே தவிர்க்கும் தனுஷ், தன் குடும்பத்தில் புயல் வீசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இவர்களது மோதல் முற்றுவதை பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுவார்கள் என்று தெரிகிறது. - See more at: http://www.tamilspace.com/2013/09/actor-dhanush-is-getting-a-divorce.html#sthash.byoZ62le.dpuf

நீதி அமைச்சுப் பதவியிலிருந்து ஹக்கீம் தூக்கப்படுகின்றார்!

http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2012/07/RH71812.jpg

நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவுப் ஹக்கீமின் அமைச்சுப் பதவி அமைச்சரவை மாற்றத்தில் மாற்றப்படவுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.


புதிய அமைச்சரவை மாற்றம் மிக விரைவில் இடம்பெறவுள்ளதால் சர்ச்சைக்குரிய அமைச்சராகக் காணப்படும் ஹக்கீமிடமிருந்து நீதி அமைச்சை  தூக்கி  தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு மேல்மட்டம் தீர்மானித்துள்ளதாம்.


அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட அமைச்சர் ஹக்கீம் முக்கிய அமைச்சுப் பதவியில் இருப்பதன் காரணமாக அரசு பல தா்மசங்கடங்களை எதிர்நோக்கியுள்ளது. இதனை அமைச்சரவை மாற்றத்தின் மூலம் சீர்செய்து கொள்ளலாம் என மேல்மட்டம் எண்ணியுள்ளது.


இதேவேளை, அமைச்சர் அதாஉல்லாவுக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சுப் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டு வழங்கப்படவுள்ளதாக கதைகள் கசிந்துள்ளது.

 அரசாங்கத்தின் மிக நெருக்கமான விசுவாசியான அதாஉல்லாவை கிழக்கி்ல் பலமாக வளர்க்க வேண்டும் என்பதற்காகவே குறிப்பிட்ட அமைச்சு வழங்கப்படவுள்ளதாம்.


சில வேளை மாவட்ட அமைச்சுப் பதவி முறை அமுல்படுத்தப்பட்டால் அதாஉல்லாவுக்கு அம்பாரை மாவட்ட அபிவிருத்தி அமைச்சுப் பதவி நிச்சயம் கிடைக்குமாம். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரின் நிலை பரிதாபம்தான். 

Thursday, September 26, 2013

கூச்ச சுபாவம் கொண்ட ஆணுடன் டேட்டிங் போக போறீங்களா? முதல்ல இத படிங்க...

காதலானது எந்நேரத்திலும், எவர் மீது வேண்டுமானாலும் வரும். அதிலும் இன்றைய காலத்தில் காதலிக்காமல் இருப்பவர்களைப் பார்க்கவே முடியாது. மேலும் இந்த காதல் ஒருவர் மீது வருவதற்கு எந்த ஒரு காரணமும் தேவையில்லை. காரணத்தோடு வரும் காதலை விட, காரணம் மற்றும் எதிர்பார்ப்பு இல்லாமல் வரும் காதல் சிறந்தது. அந்த வகையில் ஒருவர் மீது காதல் வந்துவிட்டால், அவர்களை புரிந்து கொள்வதற்கு, இன்றைய காலத்தில் மேற்கொள்ளும் ஒரு செயல் தான் டேட்டிங். நிறைய பேர் டேட்டிங் என்று சொன்னால் கோபப்படுவார்கள். ஏனெனில் அதன் உண்மையான அர்த்தம் தெரியாததாலேயே ஆகும். ஆனால் உண்மையில் டேட்டிங் என்பது ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள, இருவரும் அமைதியான ஒரு இடத்திற்கு செல்வதாகும். அந்த வகையில் நல்ல கலகலப்புடன் இருக்கும் ஆணுடன் டேட்டிங் சென்றால், கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அவர்களே நம்மை பேச வைத்து விடுவார்கள். ஆனால் கூச்ச சுபாவம் கொண்ட ஆணுடன் சென்றால், அவர்களை எளிதில் பேச வைப்பது என்பது கடினமான ஒன்று. ஏனெனில் அத்தகையவர்கள் எதையும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். எப்போதும் அமைதியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஆகவே அந்த மாதிரியான ஆணுடன் டேட்டிங் செல்வதாக இருந்தால், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சில முக்கியமான டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவ்வாறு நடந்தால், நிச்சயம் அவர்களது கூச்சத்தைப் போக்கி, அவர்களது நடவடிக்கையை மாற்றலாம்.

ரூ.2000 கடனுக்காக 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கோழிப்பண்ணை அதிபர் கைது!

வேலூர்: தாய் வாங்கிய 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக அவரது 5 வயது மகளை கடத்தி பலாத்காரம் செய்த வேலூர் கோழிப்பண்ணை அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர், பழைய நகரைச் சேர்ந்தவர் கோழிப் பண்ணை அதிபர் முபாரக். இவரிடம் வேலூர், தேவராஜ நகரைச் சேர்ந்த ஒரு பெண் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார். அந்த கடனை அந்த பெண்ணால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் முபாரக் அந்த பெண்ணை ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பலம்நேருவில் உள்ள தனது கோழிப்பண்ணையில் வேலை செய்து கடனை அடைக்கும்படி வற்புறுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த பெண்ணும், தனது 5 வயது மகளுடன் அந்த கோழிப்பண்ணையில் சில நாள் வேலை செய்திருக்கிறார். ஆனால், 'சரியாக வேலை செய்யவில்லை' எனக்கூறி அந்த பெண்ணை முபாரக் வேலையில் இருந்து நீக்கி விட்டார். 'மகளை மட்டும் வேலைக்கு வைத்துக் கொண்டு கடனை செலுத்தி விட்டு மகளை அழைத்து செல்' எனக் கூறியிருக்கிறார். வேலூர் திரும்பிய அந்த பெண் பணத்தை திரட்டிக்கொண்டு, கடனை அடைத்து மகளை மீட்க பலம்நேரி கோழிப் பண்ணைக்கு சென்று, மகளை பார்த்த போது அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. மகள் உடம்பில் சூடு போடப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருந்தாள். அதோடு தன்னை முபாரக் கற்பழித்ததாகவும் சிறுமி கூறினாள். இதையடுத்து, தாய் வலம்நேரு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் முபாரக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கொழும்புப் பிரபலத்தின் திருமண வீட்டில் கிறிக்கெற் நட்சத்திரங்கள்! (சுவாரசிய படங்கள் இணைப்பு)

yarlminnal (6)
yarlminnal (7)
yarlminnal (3)
yarlminnal (4)

ஐதேகவில் விரைவில் புதிய மாற்றம்: தெற்கில் சஜித் மேற்கில் கரு ஊவாவில் ஹரேன்?

ஐதேகவில் விரைவில் புதிய மாற்றம்: தெற்கில் சஜித் மேற்கில் கரு ஊவாவில் ஹரேன்?
தொடர்ச்சியாக 27 தேர்தல் தோல்விகளை கண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் விரைவில் பாரிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அந்த கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி கட்சியின் இளைய உறுப்பினர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

கட்சியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வெளியாகும் செய்தியை உறுதிப்படுத்தும் வண்ணம், உடனடியாக அமுலாகும் விதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரான கருஜயசூரிய அக்கட்சியின் செயற்குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அதற்கான ஆவணங்கள் நேற்று (25) கையளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சிறந்த ஆட்சியை அமைப்பதற்கு ஏதுவான மக்கள் சக்தியை கட்டியெழுப்புவதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே கருஜயசூரியவை செயற்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகாலமாக பிரதித் தலைவராக உத்தியோகபூர்வமாக செயற்குழுவில் அங்கத்தவராக இருந்த கருஜயசூரிய அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து, செயற்குழுவின் உறுப்புரிமையும் அவருக்கு இல்லாது போனமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் அடுத்து மேல், தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளன.

இம்மாகாண சபைகளில் வெற்றிவியூகத்தை வகுக்கவென ஐக்கிய தேசிய கட்சிக்குள் புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதாவது மேல் மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கரு ஜயசூரியவையும் தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவையும் ஊவா மாகாண முதலமைச்சராக ஹரேன் பெனாண்டோவையும் நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த யோசனை விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் 7ம் திகதி நடைபெறும் செயற்குழு கூட்டம் அல்லது அதன் பின்னர் இடம்பெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த யோசனையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளனர்.

இதேவேளை, அண்மையில் ரிவி தெரணவில் இடம்பெற்ற ´வாதபிட்டிய´ அரசியல் நேரடி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா, கட்சிக்குள் விரைவில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

(அத தெரண - தமிழ்)

மாணவி கர்ப்பம்: ஆசிரியருக்கும் மாணவியின் தாயாருக்கும் விளக்கமறியல்

பாடசாலை மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமாகவிருந்தார் என்ற சந்தேகத்தில் கந்தப்பளை பகுதி தோட்ட பாடசாலை ஒன்றைச்சேர்ந்த 30 வயதுடைய ஆசிரியரையும் அதற்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் மாணவியின் தாயாரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவ்விருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார்.

கந்தப்பளை பிரதேசத்தை சேர்ந்த தோட்ட பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் கர்ப்பிணியாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் சந்தேகத்திற்கிடமாக  குறித்த மாணவி கடந்த சில மாதங்களாக பாடசாலைக்கு வருகை தராமல் இருந்துள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது இதனையடுத்தே குறித்த ஆசிரியர் கந்தப்பளை பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அறிந்து கொண்ட பாடசாலையின் பழைய மாணவர்கள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு சென்று உடனடியாக குறித்த ஆசிரியரை பாடசாலையைவிட்டு வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

Wednesday, September 25, 2013

ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானம்.

               GO TO THIS WEB
                                        www.importmirror.com/2013/09/blog-post_1295.html

கர்நாடகா: இளம்பெண்ணை பலாத்காரம் செய்து பீரோவில் பூட்டிய கொடுரம்… காமுகன் தப்பி ஓட்டம் Read more at: http://tamil.oneindia.in/news/india/karnataka-woman-raped-locked-bureau-183545.html

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு பீரோவில் பூட்டப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பென்னிபுராமோளே பகுதியை சேர்ந்தவர் மாலதி (வயது 17) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருக்கு தாய் மட்டும் உள்ளார். தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். இவர் பி.யூ.சி. முதலாண்டு படித்து உள்ளார். மாலதி தினமும் இரவு அதே பகுதியில் உள்ள தனது சித்தி சாக்கம்மாவின் வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம். அதேபோல், ஞாயிறன்று இரவு 10.30 மணியளவில் மாலதி தூங்குவதற்காக தனது சித்தி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் நாகேஷ்(26) என்பவர் மாலதியை வழிமறித்து சத்தம்போடவிடமால் வாயில் துணியை திணித்து தனது வீட்டுக்குள் இழுத்து சென்றார். பின்னர் மாலதியை பலாத்காரம் செய்த நாகேஷ், மயங்கி விழுந்த மாலதியை வீட்டில் இருந்த பீரோவில் வைத்து பூட்டி விட்டார். இந்த நிலையில், மாலதி தனது வீட்டுக்கு வராததால் அவளது சித்தி சாக்கம்மா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாலதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் நாகேஷ் தான் இரவில் ரோட்டில் நடமாடியதாக சிலர் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த மாலதியின் உறவினர்கள், நாகேசின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது பீரோவின் உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டது. இதனால் பீரோவை திறக்கும்படி நாகேசிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், அதற்கு மறுத்த நாகேஷ் சாவியை வெளியூருக்கு சென்று உள்ள தனது மனைவி கொண்டு சென்று விட்டதாக கூறினார். ஆனாலும், அவர்களுக்கு சந்தேகம் அதிகமானால் பீரோவின் கதவை உடைத்து பார்த்தனர். அங்கே மாலதி மிகவும் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இதுகுறித்து சாம்ராஜ்நகர் டவுன் போலீசில் மாலதியின் சித்தி சாக்கம்மா புகார் செய்தார். அதன்பேரில், நாகேஷ் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்சார் அலி வழக்கு பதிவு செய்தார். பின்னர் நாகேசை பிடிக்க போலீசார் பென்னிபுராமோளேவுக்கு சென்றனர். ஆனால், அதற்குள் நாகேஷ் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

புகார் கொடுக்க சென்ற இளம்பெண்ணை ஆடையை கழற்றிக் காட்ட சொன்ன காவல்துறை அதிகாரி! பரபரப்பு


குஷிநகரை சேர்ந்த ஒரு பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் நபர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்க அவர் பெற்றோரோடு காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். நடந்தவற்றை கேட்டறிந்த காவல் துறை
அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு அறைக்குள் பூட்டி அவரிடம், புகாரில் தெரிவித்துள்ள படி, நீ பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை நான் உறுதி செய்ய வேண்டும். எனவே உனது ஆடையை கழற்று என வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு பிறகு கற்பழிப்பு புகாரை ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்த அவர் அப்பெண்ணையும், பெற்றோரையும் அடித்து காவல் நிலையத்தை விட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்துப்போன அப்பெண், காவல் துறை உயர் அதிகாரியிடம் தன்னை கொடுமைப்படுத்திய போலீஸ் மற்றும் கற்பழிப்பு குற்றவாளி மீது புகார் அளித்தார்.
உடனடியாக புகாரை ஏற்றுக்கொண்டு குற்றவாளியை கைது செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தர பிரதேச மாநில போலீசார்,

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை: மார்ச் வரை காலக்கெடு, இல்லையேல் அனைத்துலக விசாரணை!(காணொளி)

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சுதந்திரமான - நியாயமான விசாரணைகளை நடத்தத் தவறினால், விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் கடமை அனைத்துலக சமூகத்துக்கு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இன்று பிற்பகல், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை, பிரதி ஆணையாளர் பிளேவியா பன்சியெரி வாசித்தார்.

இந்த அறிக்கையிலேயே, மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் பதிலளிப்பதற்கு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அவர் காலக்கெடு விதித்துள்ளார்.
“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கவலை கொண்டுள்ள, குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சுதந்திரமான நம்பகமான விசாரணைகளை மேற்கொள்ள, புதிய அல்லது விரிவான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக கண்டறிய முடியவில்லை.

தனிப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது உள்ளிட்ட, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, நம்பகமான தேசிய செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது தொடக்கம், மார்ச் 2014 வரையான காலப்பகுதியை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், தமது சொந்த விசாரணையை மேற்கொள்ளும் கடமை அனைத்துலக சமூகத்துக்கு உள்ளதாக நம்புகிறேன்.

இடம்பெயர்ந்த பெரும்பாலானோர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள போதிலும், 2008-09 காலப்பகுதிக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமர்த்தப்படாதுள்ளனர்.

மீளக்குடியேறிய பலரும் வாழ்வாதாரப் பிரச்சினைகனை சந்திக்கின்றனர்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக மேலதிக ஆலோசனைகளை நடத்த இடம்பெயர்ந்தோருக்கான மனிதஉரிமைகள் சிறப்பு அறிக்கையாளரை அழைக்கும்படி சிறிலங்கா அரசைக் கோரியுள்ளோம்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது, இது அதிகாரப்பகிர்வின் முக்கியமான கட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளான போதிலும், வடக்கில் தொடர்ந்தும் கணிசமான இராணுவத் தலையீடுகள் காணப்படுகின்றன.

மீளக்குடியமர்ந்தோர், புனர்வாழ்வு பெற்றவர்கள், தடுப்புக்காவலில் இருந்J விடுதலையானவர்கள் உயர்ந்தளவில் கண்காணிக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள், குறிப்பாக பெண்களை தலைவர்களாக கொண்ட குடும்பங்கள், இராணுவத்தினர் உள்ளிட்டோரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது கவலையளிக்கிறது.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக, கடுமையான சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஆகிய இடங்களில் தனியார் நிலங்கள் பலவந்தமாக சுவீகரிக்கப்படுவது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன.

சிவில் நிர்வாகத்தின் ஏனைய பகுதிகளிலும், பொருளாதார செயற்பாடுகளிலும் இராணுவம் முக்கிய பங்கு வகிக்கிறது.

படைக்குறைப்பு, ஆயுதக்குறைப்பு, சிவில் செயற்பாடுகளில் இருந்து விலகுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தெளிவானதொரு காலஎல்லையை வகுக்க வேண்டும்.

காவல்துறைத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சில் இருந்து வேறாகப் பிரிக்கப்பட்ட போதிலும், புதிய அமைச்சும், பாதுகாப்பு அமைச்சைப் போலவே, சிறிலங்கா அதிபரின் நேரடி வழிகாட்டலில் முன்னாள் ஜெனரல் ஒருவரின் கீழேயே இயங்குகிறது.

காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்க, ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால், இந்த ஆணைக்குழு 1990 தொடக்கம் 2009 வரை வடக்கு,கிழக்கில் காணாமற்போனவர்கள் குறித்து விசாரிக்கவே பணிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலும், ஏனைய பகுதிகளிலும், அண்மைக்காலத்தில் நிகழ்ந்த வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த விசாரணைகள் இதற்குள் உள்ளடக்கப்படவில்லை.

எனவே, சிறிலங்கா அரசாங்கம் ஆணைக்குழுவுக்கான பொறுப்பை பரவலாக்க வேண்டும்.

தடுப்பிலுள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால், நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் அல்லது, விடுதலை செய்யப்பட வேண்டும், இல்லையேல் புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டும்.

அண்மைக்காலமாக மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக தேவாலயங்களும், மசூதிகளும் தாக்கப்பட்டுள்ளன.

ஆனால், குற்றவாளிகளுக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மனிதஉரிமை ஆர்வலர்கள், சட்டவாளர்கள், ஊடவியலாளர்கள், தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

முல்லைத்தீவில் நான் பயணம் செய்த கிராமங்களுக்குச் சென்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், விசாரணை நடத்தியது துரதிஷ்டமான கவலை தரும் விடயம்.

நிறைவேற்று அதிகாரத்தை சமப்படுத்தக் கூடிய சுதந்திர காவல்துறை ஆணைக்குழு, சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, மனிதஉரிமை ஆணைக்குழு என்பனவற்றின் அதிகாரங்கள் 18வது திருத்தச்சட்டத்தின் மூலம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை தொடர்ந்தும் முக்கியமான கவனம் செலுத்துவதுடன், வரும் மார்ச் மாதம் அதற்கான பரிந்துரைகளையும் முன்வைக்கும் என்றும் நம்புகிறேன்.

சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களின் உதவியையும் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்க ஐ.நா மனிதஉரிமை ஆணையம் தயாராகவே உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

''நாற்பது வயதிலும் இளமையோடு இருக்க விருப்பமா?

நாற்பது வயதிலும் இளமையோடு இருக்க விருப்பமா? உணவு, உடற்பயிற்சி, தெளிந்த மனம் இந்த மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அழகும், இளமையும் ஆர்ப்பரிக்கும்'' என்கிறார்கள் டயட்டீஷியன் தாரணி, உடற்பயிற்சி நிபுணர் சதீஷ், மனநல மருத்துவர் அபிலாஷா.

உணவு

'பெரும்பாலான பெண்கள் புற அழகைப் பற்றிக் கவலைப்படுவார்களே தவிர உடல் ஆரோக்கியத்துக்கான எந்த விஷயத்தையும் கடைப்பிடிப்ப தில்லை. உணவு என்பது வெறும் உள் உறுப்புக்களின் ஆரோக்கியம் மட்டுமல்ல, புற அழகிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 40 வயதை நெருங் குகையில், உடலில் சக்தி குறைந்து, தசைகள் தளர ஆரம்பிக்கும். என்ன சாப்பிட்டால் இதைத் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து அதை 30 வயதிலேயே ஆரம்பித்துவிட்டால் 40 வயது என்ன 75 வயது வரைகூட ஆரோக்கியமாக இருக்கலாம்!  
40 வயதில், பெண்களுக்கு கால்சியம் மற்றும் புரதச்சத்துக் குறைபாடுகள் தலைகாட்டும். சின்னசின்ன விஷயங்களில் அக்கறை செலுத்தினால் போதும் அதிலிருந்து மீண்டுவிடலாம்.
இந்த வயதில் உடல்பருமன் இன்னொரு பெரும் பிரச்னை. எண்ணெய் சேர்த்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஒரு மாதத்துக்கு குடும்பம் ஒன்றுக்கு இரண்டு லிட்டர் எண்ணெய் போதுமானது. வெளியில் சாப்பிடும் நாட்கள் அதிகம் இருந்தால், ஒன்றரை லிட்டர் எண்ணெய் மட்டுமே போதும்.  
அசைவப் பிரியர்கள், வாரத்துக்கு இரண்டு நாட்கள் அசைவம் சாப்பிட்ட£ல், மற்ற ஐந்து நாட்கள் பருப்பு வகைகள், பால், தயிர் போன்ற புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.  
சாதத்தைக் குறைத்து, காய்கறிகள் அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம்.  அவரைக்காய், முட்டை கோஸ், பீன்ஸ் மற்றும் நீர்க் காய்களான சௌசௌ, புடலங்காய், பூசணிக்காய் ஆகியவை அடிக்கடி உணவில் இடம் பிடிப்பது நல்லது. பட்ஜெட்டில் இடிக்கும் என்று பழங்களைத் தவிர்க்காமல், தினமும் மூன்று வகை பழங்களை கட்டாயம் எடுத்துக் கொண்டால் உடலுக்கு ஆன்டிஆக்சிடென்ட் கிடைக்கும். தினம் ஒரு கீரையை உணவில் எடுத்துக் கொள்வது, இரும்புச்சத்து குறைபாடு இல்லாமல் உடலை வலுவாக்கும்' என்ற தாரிணி, ஒரு நாளில் இருக்கவேண்டிய புரதம், கால்சியம் சத்துக்களை பட்டியலிட்டார்...
400 எம்.எல். டோன் செய்யப்பட்ட பால் அல்லது தயிர்.
பாலில் 2.5 சதவிகிதம்தான் கொழுப்புச் சத்து இருக்க வேண்டும்.
அரை கப் சமைத்த பருப்பு, தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி அல்லது மீன், ஒரு முட்டை.
கோழி மற்றும் மீனை வறுத்துச் சாப்பிடக்கூடாது. வேக வைத்து அல்லது குழம்பாகச் செய்து சாப்பிடவேண்டும்.
உடற்பயிற்சி
மார்ஷல்ஆர்ட் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் சதீஷ்.
உடல் எடை கூடினால், தோற்றத்தில் முதுமைத் தெரியும். ஃபிட்டாக இருப்பது மிகவும் கஷ்டமான விஷயம் இல்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே போதும்.
முதன்முதலில் உடற்பயிற்சி செய்ய நினைப்பவர்கள், புத்தகத்தைப் படித்து, டி.வி-யைப் பார்த்து பயிற்சியில் ஈடுபடக்கூடாது.  எல்லாருக்கும் எல்லாப் பயிற்சிகளும் பொருந்தாது. மருத்துவரிடம் அல்லது தேர்ந்த உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனைப் பெற்றப் பிறகே தொடங்கவேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு அரை மணி முதல் 45 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
இளமையாகஇருக்க, ஒன் லெக் டெட் லிஃப்ட் வித் டம்பிள் ரோ, ஸ்குவாட் வித் ஷோல்டர் ப்ரெஸ், லன்ஜஸ் வித் பைசெப்ஸ் கர்ல், ட்ரை செப்ஸ் டபுள் ஆர்ம் எக்ஸ்டென்ஷன் வித் காஃப் ரைஸ் போன்ற பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம்.
இதன்மூலம் கை, வயிற்றுப் பகுதி, தோள் பட்டை, புஜம், கை, கால், பின் தொடை, இடுப்பு போன்ற தசைகளை உறுதியாகும். தேவையற்ற தசைகள் குறையும்.  
பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்த முதல் சில நாட்கள், உடல்வலி இருக்கும். ஆனால், நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இவை ஒட்டுமொத்த உடலுக்கானப் பயிற்சிகள்' என்கிறார் சதீஷ்.
மனம்
மனநல மருத்துவர் அபிலாஷா
'மனசே சரியில்லை’ - அடிக்கடி எட்டிப் பார்க்கும் வெறுப்பு நிறைந்த வார்த்தைகள் இவை.  40 வயதை 'மிட் லைஃப்’ என்போம். வருமானம், பிள்ளைகள்  திருமணம், பணப் பிரச்னை, குடும்ப சூழல் என நெருக்கடிகள் நிறைந்த காலக்கட்டம் இது. அதிக பொறுப்புகளை முதுகில் சுமக்க நேரிடும்.  பதின் வயதில் பிள்ளைகள் இருப்பதால், தலைமுறை இடைவெளிப் பிரச்னைகள் வாட்டும். இவை நாளடைவில் ஒரு சோர்வு மனநிலைக்குத் தள்ளிவிடும்.  இந்தக் கவலையே வயதைக் கூட்டிக் காட்டும்.  'இனிமே எனக்கென்ன’ என்று வாழ்வின்மீதான, பற்றுதல் குறைந்து அழகு ஆரோக்கியத்தின் மீது அக்கறை குறையும். பெண்கள் மெனோபாஸ் பிரச்னையால் திணறுவார்கள். இதை எதிர்கொள்ள,
தினமும் காலையில் 'ப்ரிஸ்க் வாக்கிங்’ செல்லுங்கள். வெளிக்காற்று உங்கள் உடலையும், மனதையும் புத்துணர்வாக்கும்.
எதிர் காலத்தை நினைத்து கவலைப்படாதீர்கள்.  
நேர மேலாண்மை கற்றுக் கொள்ளுங்கள்.
சின்னச் சின்ன உதவிகளை மற்றவர்களுக்குச் செய்வதன் மூலம் ஆத்மதிருப்தி கிடைக்கும்.  
குறை சொல்வதை விடுத்து, ஆக்கபூர்வமான விஷயங்களில் ஆர்வம் காட்டலாம்.
தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்யலாம்.
நம்மை நாம் அழகுப்படுத்திக் கொள்ளும்போது, மனம் சந்தோஷத்தில் மிதக்கும். ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள். உங்களை நீங்களே ரசிப்பதன் மூலம், உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற்று, எனர்ஜியுடன் இருக்கலாம்'' என்கிறார் அபிலாஷா.

அரோமா தெரபிஸ்ட் மற்றும் அழகுக்கலை நிபுணர் கீதா அசோக்
30 வயதைக் கடந்துவிட்டாலே, தலையணை வைத்துப் படுப்பதைத் தவிர்த்துவிடவேண்டும். இது கழுத்துப் பகுதியில் சதை மடிப்புகள் விழாமல் தடுக்கும். முகத்துக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால் சருமத்தில் சுருக்கம் வராது.
தினமும் பயத்தம் மாவு பயன்படுத்துவது முகத்தை பளிச்சென காட்டும்.

ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்குக் குளிப்பது, வாரம் ஒரு முறை எண்ணெய்த் தேய்த்து மசாஜ் செய்து குளிப்பது, மாதம் ஒருமுறை வீட்டிலேயே முகத்துக்கு 'பழ பேக்’ போடுவது என ஒரு சார்ட் போட்டு செயல்பட்டால், உடலில் சோர்வு இருக்காது. சருமம் சுருக்கம் இல்லாமல் அழகு கூடு