Saturday, November 30, 2013

இலங்கையில் தேசிய தேர்தலை சந்திக்க தயாராகும் ரணில், சந்திரிக்கா, சம்பந்தன், பொன்சேகா உட்பட தலைவர்கள் இணைந்த அணி?

இலங்கையில் அடுத்து நடத்தப்படும் தேசிய ரீதியிலான தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா, ஆர்.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட பல அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்பது தொடர்பில் தற்பொழுது பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த அரசியல் கூட்டணியில் இணையும் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடாது புதிய கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பிலான சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய கூட்டணியை சேர்ந்த ஒருவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுவதற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பொது வேட்பாளரின் பெயர் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டன.
ஏற்படுத்தவுள்ள புதிய கூட்டணியில் இணையவதா இல்லையா என்பது பற்றி ஜே.வி.பி இதுவரை முடிவு செய்யவில்லை.
புதிய கூட்டணியில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள் பலவற்றை இணைத்து கொள்வது தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட உள்ளன என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

No comments:

Post a Comment