Tuesday, November 26, 2013

இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள். திருமணமான 20 வயது இளம் யுவதியை ஐவர்.. (abuse)

நேற்று தன்னுடைய 10 வயது மகளை நிர்வாணமாக படம்பிடித்து பல நாட்களாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 100 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கபப்ட்ட செய்தி  பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியதும் பொதுமக்கள் இது தொடர்பில் கடும் விமர்சன்களை முன்வைத்ததும் அறிந்ததே.. அச்செய்தி ம
றைவதற்குள்,

திருமணமான 20 வயது இளம் யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஐவர் சிறிமாபோதிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புத்தளம் - சீரம்பியடி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.


குறித்த பெண் தெரிந்தவர் ஒருவருடன் புத்தளம் - பாலாவி பகுதிக்குச் சென்ற போது  அப்பகுதியில் உள்ள ஐவர் ஒன்று சேர்ந்து அப்பெண்ணை பெண்ணை காட்டுப் பிரதேசத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.


பொலிசாரால் கைது செய்யபப்ட்ட சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.


புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருனகின்றனர்.

No comments:

Post a Comment