Tuesday, November 26, 2013

ஒவ்வொரு இலங்கை பிரஜையும் தலா 3 லட்சம் ரூபா கடனாளி!

        இந்தநாட்டில் தற்போது ஒவ்வொரு நபரும் தலா 3 லட்சத்து 21 ஆயிரத்து 472 ரூபா கடனாளிகள் என பிரதி நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று (26) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய மொத்தக் கடன் 6518 பில்லியன் என பிரதி நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் தற்போது வரவு - செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பித்தக்கது.
(அத தெரண - தமிழ்

No comments:

Post a Comment