Tuesday, November 26, 2013

பன்னலயில் படுகொலை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர். இவரை பற்றிய விபரங்கள் உங்களுக்கு தெரியுமா? (murder)


(A.M.ராசித்)

பன்னல பொலிஸ் பிரிவில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி நாபொகுன வயல் வெளியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இச்சடலம் முஸ்லிம் சகோதரர் ஒருவரது என மரண விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருமையான தலைமுடியைக் கொண்ட இவர் சுமார் 24 – 28 வயதுக்கு உற்பட்டவர் என்றும், 5½ அடி உயரம் உடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இறுதியாக டெனிம் காற்சட்டை, வரி வரி சேட் அணிந்தும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் பற்றிய விபரம் தெரிந்தவர்கள் பன்னல பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.

037 22 460 22



No comments:

Post a Comment