Tuesday, November 28, 2017

செல்பி எடுக்க முயன்றவர் யானை தாக்கி உயிர் பலி



வனவிலங்குடன் #செல்பி எடுக்க முயன்றவர் யானை தாக்கி உயிர் பலி ;
மேற்கு வங்கத்தில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரை, யானை தூக்கிப்போட்டு பந்தாடியதில் அந்த நபர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் லத்தாகுரி வனம் காட்டுயானைகள் அதிகம் வாழும் பகுதியாகும். அந்த வழியாகத் தேசிய நெடுஞ்சாலை சென்று வருகிறது. சம்பவத்தன்று ஜெய்பாகுரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று நின்றுகொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் யானை கடந்து போகட்டும் என வாகனங்களை நிறுத்தியுள்ளனர். அப்போது சாதிக் என்ற இளைஞர் வாகனத்திலிருந்து கீழே இறங்கி தொலைவில் நின்றபடி யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றார். இதைப் பார்த்து மிரண்டுபோன யானை வேகவேகமாகச் சாதிக்கின் அருகே ஓடிச்சென்று அவரைத் தூக்கிப்போட்டு பந்தாடியது. காலால் மிதித்ததில் சாதிக் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
செல்ஃபி எடுப்பதில் தீவிரமாக இருந்ததால், யானை பின்னால் வேகமாக ஓடி வருவதை சாதிக் கவனிக்கவில்லை. செல்ஃபி ஆசை அவருடைய உயிரைப் பறித்துள்ளது. இந்தக் காட்சிகளை ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகப் பரவி வருகிறது. சாதிக் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்
video link

ரணில் விக்கிரமசிங்க - இலங்கை அரசியலில் நல்லவரா ? கெட்டவரா ? என தெரியாத ஒரு தனி ரகம்.


ஒரு கட்டுரையில் அவரை தாறுமாறாக விமர்சிப்போர் கூட இன்னொரு கட்டுரையில் புகழ்ந்து தள்ளியிருப்பார்கள் .
இதை பல சந்தர்ப்பங்களில் வாசித்ததுண்டு.
அப்படியொரு புரியாத புதிர் . வெற்றியா ? தோல்வியா ? ஆட்சி கை நழுவுமா ? எதைப்பற்றியும் மனிதர் அலட்ட மாட்டார்.
அதனால் தானோ என்னவோ 22 தேர்தல்களில் தோல்வியடைந்தும் அலட்டாமல் தலைமைத்துவத்தில் உறுதியாகவே இருந்தார்.
2015 ஜனாதிபதி மாற்றத்தின் பின் இடைக்கால அரசாங்கத்தில் குறைந்த உறுப்பினர்களை வைத்துக்கொண்டே பிரதமராகி சாதனையும் புரிந்தார்
நாடே கூடி நின்று விமர்சித்தாலும் அவர் அதையெல்லாம் கணக்கெடுப்பதில்லை.
ஒரு அரசியல்வாதிக்கு விமர்சணம் என்பது தவிர்க்க முடியாதது தான். ஆனால் அதிலே அவன் நல்லதையும் , கெட்டதையும் பிரித்து எடுக்க வேண்டும் . தவறுகளை திருத்தல் வேண்டும் ஆனால் இவருக்கு எதுவுமே பொருட்டல்ல.
இவர் பெரிதாக யாரின் ஆலோசணைகளையும் கேட்பதில்லை , ஏனெனில் இவர் பல சர்வதேச அமைப்புக்களின் , நாடுகளின் ஆலோசணை சபைகளிலும் இருப்பதாலோ என்னவோ ? ஒரு வேளை இவரின் ஆலோசகர்களும் வெளிநாட்டில் இருக்கலாம்.
அடுத்து பாமர மக்களோடு நெருங்கி பழகுவதிலும் மனிதர் #வெரி_வீக் ரகம் தான்.
இத்தனைக்கும் சிறந்த திட்ட வகுப்பாளர் , பொருளாதார எண்ணங்களும் சர்வதேச உறவுகளையும் கொண்டவர். இளம் வயதிலேயே நாட்டின் கல்வியமைச்சராக இருந்த ஒருவர் மாத்திரமல்லாது பழுத்த ஒரு அரசியல்வாதியும் கூட , இது வரையும் ஊழலில்லாதவர் அதற்கான தேவையுமில்லாதவர் என்றும் அறியப்பட்டவர்.
யுத்த முடிவுக்கு கூட இவர் தான் தனது பிரித்தாளும் தனத்தால் அடித்தளமிட்டார் என்பது பலரும் நினைவு கூற மறக்கும் விடயம் -
அதாவது 2002 ல் பிரதமராய் இருந்த நேரம் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையின் போது விடுதலை புலிகள் இயக்கத்தை தனது பிரித்தாளும் புத்தியால் இரண்டாக பிளவுப்படுத்தி அந்த அமைப்பை வடக்கிற்குள் மட்டும் மட்டுப்படுத்தினார்.
அதனால் தான் 2005 ஜனாதிபதி தேர்தலில் இவரை துரோகி எனவும் , தேர்தலை பகிஷ்கரிக்குமாறும் விடுதலை புலிகளின் தலைவர் அப்போது மக்களுக்கு அறிவித்தார். இல்லையேல் அந்த தேர்தலில் மஹிந்தர் வீட்டுக்கு போக ரணில் ஜனாதிபதியாகியிருப்பார்.
2002 ல் ஏற்பட்ட ஆட்சியையும் கூட தனது தன்னாதிக்க முடிவுகளால் 2004 ல் இழந்தார்.
இதையெல்லாம் பதிய காரணம் இதுவே .
ரணிலானவர் எப்போதும் செய்கிற இன்னொரு விடயம் தான் தனக்கு தேவையானவர்களை தூக்கி வைப்பார். தேவையில்லை என்று நினைப்போரை அமுக்கி வைப்பார்.
அப்படி அவர் தற்போது அமுக்கி வைத்திருப்பவர்கள் அவரது கட்சியின் பிரதி தலைவரான சஜித்தின் பரிவாரங்கள்.
புத்திக்க பத்திரன , ரோசி , சுஜீவ சேனசிங்க , மைத்ரி குணரத்ன ( இவர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தும் விட்டார் ) என்று பட்டியல் நீளமானது.
அவர் தூக்கி வைத்திருப்போர் தான் ரவி கருணாநாயக்க , மலிக் சமரவிக்ரம , அர்ஜுன மகேந்திரன் , அர்ஜூன் மகேந்திரனின் மருமகனான அலோசியஸ் என்று இன்னொரு நீளமான பட்டியல்.
இவ்வளவு ஏன் ? எவ்வளவோ அணுபவமான ஆட்கள் இருக்கையில் இவருக்கு விசுவாசமான ஒரு இளைஞருக்கே நாட்டின் முக்கிய அமைச்சான கல்வி அமைச்சையே கொடுத்துள்ளார்.
இப்படி தனக்கு தேவையான சிலரை உச்சாணிக்கொப்பில் ஏற்றப்போய் தான் தனது #மிஸ்டர்_க்ளீன் இமேஜை இழக்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டும் உள்ளார்.
முதலாவது தனது ஆஸ்த்தான நண்பர் ரவிக்கு நிதி அமைச்சரை வழங்கியமையும் , இன்னொரு ஆஸ்த்தான நண்பர் அர்ஜுன் மகேந்திரனுக்கு மத்திய வங்கி ஆளுநர் பதவி வழங்கியதும் மிகப்பெரிய சறுக்கலாக மாறியுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி விவகாரம் இவர்கள் இருவராலேயே உருவானதாகும். மகேந்திரன் தனது மருமகனின் நிறுவனமான #பேப்பச்சுவல்_ட்ரஸ்ட்டீஸ் நிறுவனத்திற்கு முறிகளை வழங்கியதே பிரச்சிணைகள் எல்லாவற்றிற்கும் பிரதானமாக அமைந்துள்ளது.
இந்த பிணைமுறியால் அர்ஜூன் அலோசியஸின் அந்த நிறுவனத்தின் 14 மாத இலாபம் மட்டும் 13000 மில்லியன்கள் என்றும் , இது ஒரு அதீத வளர்ச்சி என்றும் ஹெரோயின் வியாபாரம் செய்தால் கூட இதனை எவராலும் பெற முடியாது என்றும் கடந்தவாரம் ஒரு ஊடகம் செய்தி வழங்கி இருந்தது.
அந்த நிறுவனத்தின் சொத்துடைமையும் 1850 மில்லியன்களாக வளர்ந்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டிருந்தது.
இது இப்படி செல்கையில் கடந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் பிணை முறி விவகாரத்தில் தனது குற்றங்கள் நிரூபணமானால் தான் பதவியை துறப்பேன் என்று அறிவித்ததாகவும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் #மிஸ்டர்_க்ளீனை - #க்ளீன்_போல்ட் செய்ய அவரின் அணியிலேயே பலர் காத்து கிடக்கின்றனர்.
அதோடு இவ்விடயத்தை விசாரிக்கும் குழுவை அமைத்து விசாரிக்க அணுமதிகள் வழங்கியவர் சாத்சாத் மைத்திரிப்பால ஆவார் என்பதும், நல்லாட்சியின் இரு சக்கரங்களாக ஜனாதிபதியும் பிரதமரும் இருப்பதும் அவதானத்திற்குரியதாகும்
அரசியலில் எதுவும் நடக்கலாம் பொறுத்து பார்ப்போம்

Monday, November 27, 2017

சவூதியில் கடந்த 24 மணி நேரத்தில் 885 வெளிநாட்டர்கள் அதிரடிக் கைது (படங்கள் இணைப்பு)

கடந்த 24 மணி நேரத்தில் சவூதி அரேபியாவின் தலைநகர் றியாத் போலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின் பின்னர் 885 கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவின் சட்டவிதிகளை விதிகளை மீறி தங்கியிருந்த வெளிநாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளும் உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.




டிக்வெல்லவின் ஆட்டமிழப்பை மைதானத்தில் நடனமாடி கொண்டாடிய கோஹ்லி!!! (காணொளி இணைப்பு

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, வித்தியாசமான முறையில் டிக்வெல்லவின் ஆட்டமிழப்பை கொண்டாடியுள்ளார். “சிலிப்” திசையில் களத்தடுப்பில் ஈடுபட்ட கோஹ்லி, நடனமாடியவாறு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 205 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதில் இலங்கை அணியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடிய நிரோஷன் டிக்வெல்ல 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, ஜடேஜாவின் பந்து வீச்சில் இசான் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
விராட் கோஹ்லி இவ்வாறு நடனமாடியுள்ள காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விராட் கோஹ்லி நடனமாடிய காணொளி இதோ…!

Sunday, November 26, 2017

End of Service Benefits in Kingdom of Saudi Arabia (KSA)

End of Service Benefits in Saudi means that any employee or worker who is working in Kingdom of Saudi Arabia (KSA) get some cash after ending their service and will be entitled for End of Service benefits as per Saudi Labor Law. If an employee is working for a company and when he resigns or gets terminated he will get his full and final settlement from his Company which is known as End of service benefits.
End of Service (EOS) benefits all depends on the time period an employee works in a company and based on that he will be awarded cash benefits towards ending his services from the company.
Employees leave the company in two situations, either they will resign or will get terminated from the company. EOS benefits will applicable in both the sitaution as follows:

IN CASE OF RESIGNATION:

Scenario 1:
If an employee resigns in less than 2 years of work then he will not be entitled for End of Service (EOS) benefits.
To get these benefits he should have to complete minimum 2 years of employment.
Scenario 2:
If an employees stays and works in the company for more than 2 years and less than 5 years. He will be entitles to
get 1/3rd of his EOS benefits. EOS Benefits will be half of his Salary in this case.
Scenario 3:
If an Employee complete 5 years in a company then he will be entitled to get 2/3rd of his End of Service Benefits
along with Full Salary %
Scenario 4:
If an Employee complete his 1o years of service and then resigns, he will be entitled for Full End of Service
Benefits Awards with % of Full Salary

IN CASE OF TERMINATION:

Scenario 1:
If an Employee gets terminated by his employer or company before 5 years of his service then he will be entitles for Half Salary
Scenario 2:
If an Employee get termianted after completion of 5 years, then he will be entitled for Full Salary

saudiexpatriate.com
http://saudiexpatriate.com/end-service-benefits-kingdom-saudi-arabia-ksa/

Saturday, November 25, 2017

ஆண்குறியை பெரிதாக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க

நிறைய ஆண்களுக்கு ஆண்குறியின் அளவு ஓர் பெரிய பிரச்சனையாக உள்ளது. பல ஆண்களுக்கு தங்களது ஆண்குறியின் அளவை எப்படி பெரிதாக்குவது என்று தெரியாமல் உள்ளனர்.
இதற்காக ஆண்குறியின் அளவைப் பெரிதாக்க உதவும் மாத்திரைகள், சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
ஆனால் அப்படி செயற்கை வழிகளைப் பின்பற்றுவதை விட, இயற்கை வழிகளைப் பின்பற்றுவது தான் நல்லது. அதற்கு ஆண்குறி அளவை பெரிதாக்க உதவும் உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இங்கு ஆண்குறி அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வாழைப்பழம் (banana)
பல ஆய்வுகளில் ஆரோக்கியமான இதயத்தைக் கொண்டுள்ள ஆண்கள், ஆண்குறி அளவை பெரிதாக்க நினைத்தால் முடியும் என கூறுகின்றன. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
இது இதயத்தை ஆரோக்கியமாகவும், உடலில் இரத்த ஓட்டத்தை சீராகவும் வைத்துக் கொள்ளும். ஒரு ஆணின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், அது ஆண்குறியை பெரிதாக்கும் முயற்சியில் வெற்றி காண உதவும். எனவே ஆண்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வருவது ஆண்குறிக்கு நல்லது.
சால்மன்
சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது இரத்த அடர்த்தியைக் குறைத்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்யும். மேலும் பல ஆய்வுகளில், ஆண்குறியைப் பெரிதாக்குவதற்கு ஆரோக்கியமான இரத்த ஓட்டம் அவசியமானது என தெரிய வந்துள்ளது
வெங்காயம் (onion)
ஆண்கள் தங்களது அன்றாட உணவில் வெங்காயத்தை சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள பைட்டோ கெமிக்கல், இரத்தம் உறைவதைத் தடுத்து, தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருக்க செய்து, ஆண்குறியைப் பெரிதாக்கவும் உதவும்.
டார்க் சாக்லேட் (Dark chocolate )
டார்க் சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனால், தாவர வகை பைட்டோ கெமிக்கல்கள் உள்ளது. இது ஆண்குறியில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, ஆண்குறியை பெரிதாக்க உதவும்.
குறைவான கொழுப்புள்ள தயிர் (yogurt)
இயற்கை வழியில் ஆண்குறி பெரிதாக்க உதவும் உணவுகளில் அதிக அளவில் மெலிந்த புரதம் இருக்க வேண்டும். இந்த மெலிந்த புரதம் கொழுப்பு குறைவான தயிரில் இருக்கும்.

எவ்வித அழுத்தங்கள் கொடுத்தபொழுதும் ஹாதியாவின் ஈமானை உங்களால் தகர்க்க முடியுமா???

இன்று டெல்லி உச்ச நீதிமன்றம் கொண்டு செல்வதற்காக கேரளா விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டார் வீட்டுச்சிறையிலிருந்த ஹாதியா.

.
அங்கு ஹாதியா செய்தியாளர்களை சந்திக்க காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி ஹாதியாவின் அவலக்குரல் ஒலித்தது.
.
" நான் எந்த நிர்பந்தம் இன்றி இஸ்லாமிய மதத்தை தழுவினேன் , என் கணவனோடு சேர்ந்து நான் வாழ வேண்டும், எனக்கு நீதி வேண்டும் என்று ஹாதியா கதரியது நெஞ்சை உலுக்கியது."
.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமைக்காக எவ்வளவு கொடுமைகள், நிர்பந்தங்கள் சித்தரவதைகள் செய்தபொழுதும் ஆளும் அதிகார வர்க்கத்தால் ஹாதியாவின் தலையை மறைத்திருக்கும் ஹிஜாபை கழற்ற முடியவில்லை?
.
எவ்வித அழுத்தங்கள் கொடுத்தபொழுதும் ஹாதியாவின் ஈமானை உங்களால் தகர்க்க முடியுமா???